Skip to main content

Insult to injury

 ஈசாப் கதைகள் படித்திருப்போம்.

கிரேக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் குட்டிக் கதைகள் எல்லா வயதினரையும் கவர்ந்து விடும். இப்போதும் குழந்தைகள் படிக்கும் காக்கா நரிக் கதைகள் எல்லாம் ஈசாப் கதைகளில் இருந்து தோன்றியவை தான். பெரும்பாலும் விலங்குகளே கதைகளில் வரும். ஆனால் மனிதர்களுக்கு அவை பாடம் கற்பிக்கும்.


அதில் ஒரு கதை.


பறந்து வந்த ஈ ஒன்று ஒருவன் தலையின் நெற்றியோரம் வழுக்கைப் பகுதியில் அமர்கிறது. உடனே அவனுக்கு கோபம் வருகிறது. அந்த ஈயைக் கொல்ல வேண்டும் போல ஒரு வெறி. உடனே அருகில் இருந்த அகலமான ஒரு தட்டை எடுத்து டமார் என ஈ ஒட்டி இருந்த இடத்தை அடிக்கிறான். ஈ பறந்து விட்டது. தட்டை அடித்த வேகத்தில் இப்போது தலையில் எரிச்சல் வேறு. 


தப்பிப் போன ஈ இப்போது அருகே வந்து அவனிடம் சொன்னது. 

நான் உன்னை வலிக்காமல் மெதுவாகத் தொட்டதற்கே என்னைக் கொல்ல முயற்சித்தாய். இப்போது டமாரென உன் தலையில் நீயே அடித்துக் கொண்டாயே அதற்கு உன்னை நீ என்ன செய்யப் போகிறாய்?

என்று கேட்டு விட்டுப் பறந்து சென்றது.


வலி ஒரு பக்கம்; அந்த ஈ கேட்டதால் வந்த அவமானம் ஒரு பக்கம். இதைத்தான் ஆங்கிலத்தில் 'adding insult to injury' என்று கூறுவார்கள்.


இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம். கன்னத்தில் கடித்த கொசு பறந்து சென்றபின்பு 'கொசுவைக் கொல்லாமல் விடமாட்டேன்' என படாரென கன்னத்தில் அறைந்து கொண்டு அந்த வலியோடு அதை யாராவது பார்த்து விட்டார்களா என அவசரமாக அங்கும் இங்கும் பார்ப்போமே அதுவும் 'adding insult to injury' தான்.


An example for the usage:


He was driving on the wrong side of the road. He hit my car and to add insult to injury he started scolding me for the hit.








Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...