எதேச்சையாகத் தான் அவளைப் பார்த்தேன்.
நான் பார்த்ததை அவள் பார்த்திருப்பாள் போல...
நான் பார்த்த அந்தக் கணமே அவள் என்னைத் திரும்பப் பார்த்தாள்.
பார்வையா அது?
அது எப்படி தெரியுமா இருந்தது?
தான் ஒருத்தி மட்டும் வந்து தாக்குவது போதாதென்று ஒரு படையோடு வந்து தாக்குவது போலல்லவா இருந்தது!
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
(திருக்குறள்)
அவள் வீசிடும்
விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது
தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது
போன்று இருந்தது.
Comments
Post a Comment
Your feedback