Skip to main content

ஆல்பியா நதியும் அரசியல் சாக்கடையும்

  

அரசியலை  சாக்கடைக்கு ஒப்பிடுவது வழக்கம்.  பொதுவாக நல்ல பண்புகள் இருப்பவர்கள் அரசியலில் காணாமல் போவதும் கீழ்த்தரமான மனிதர்கள் கொண்டாடப்படுவதும் அதற்குக் காரணமாகச் சொல்வார்கள். எப்போதாவது நன்றாகப் படித்தவர்கள் அல்லது தன்னலம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களை  சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்த வந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவது இயல்பு. 


ஒரு அருவருப்பான இடம். அதை சுத்தப்படுத்த ஒரு ஹீரோ என்ற உருவகம் கிரேக்கக் கதைகளிலிருந்து வந்தது.


என்ன அந்தக் கிரேக்க புராணக்கதை?


ஆஜியஸ் மன்னனுக்கு குதிரைகள் மேல் ரொம்பவும் விருப்பம். அவன்   தொழுவத்தில் 3000 குதிரைகள் இருந்தன. என்ன கொடுமை என்றால் 30 ஆண்டுகளாக அந்தத் தொழுவத்தை யாரும் சுத்தப்படுத்தவில்லை. ஒரு நாள் கவனிக்காமல் விட்டாலே மாட்டுத்தொழுவம் எப்படி இருக்கும் என்பது தெரியும். 


இப்படி 30 ஆண்டுகளாக அருவருப்பான இடமாக உள்ள அந்த இடத்தை யாராவது சுத்தப்படுத்த முடியுமா என்ன?


 இந்த தொழுவங்களை சுத்தம் செய்யும் பொறுப்பு   ஹெர்குலஸ்ஸிடம் (Hercules) ஒப்படைக்கப்பட்டது. அவன் ஆல்பியா நதியின் போக்கை மாற்றி தொழுவத்துக்கு அனுப்பி வைத்தான்.


தொழுவத்தில் கழுவப்பட்ட  அந்த நீர் சாக்கடை போலத் தோன்றினாலும் தொழுவம் சுத்தமாகிவிட்டது. 


ஆக, அசுத்தம் நிறைந்த இடங்களை சுத்தம் செய்ய  ஒரு ஹெர்குலஸ் அனுப்பி வைக்கப்படுவான் என்பது  கிரேக்க புராணம் சொல்லும் செய்தி.


தமிழ்நாட்டுக்கு   வர வேண்டிய  ஹெர்குலஸ்  மட்டும் வழி மாறிப் போயிருப்பானோ?


ஆக, புரையோடிப் போன அசுத்தமான இடத்தைச் சுத்தப்படுத்த  Cleanse the Augean stables என்ற வழக்கைப் பயன்படுத்துவார்கள்.


Example for the usage:


Talking about corruption, the Prime Minister said that he would cleanse the Augean stables in a hundred days.









Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...