Skip to main content

பாரி மகளிர் இவர்கள்.(புறநானூறு 200)


 

பாரி மன்னன் இறந்த பின்பு பாரி மன்னனின் மகள்களை மணம் புரிய மன்னன் விச்சிக்கோவிடம் கபிலர் கேட்டுக் கொண்டது இப்பாடல் வழியே...

பாடல் கூறும் செய்தி இதுதான்:

மன்னா இவர்கள் பாரியின் பெண் குழந்தைகள். முல்லைக்கொடி தன்னை பாடாத போதும் அதற்கு தேரையே அளித்த மன்னன் பாரியின்  பெண்கள் இவர்கள்.

 

நான் பரிசு கேட்க வந்தவன்;அந்தணன்.

 

வாள் திறத்தால் பகைவர்களை வென்ற மன்னனே!

இந்தப் பெண்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.


பாடல்:

 


பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,
நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! 

(புறநானூறு 200)


பாடியவர்: கபிலர்.


பாடப்பட்டவன்: விச்சிக்கோ.



திணை: பாடாண். 

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.


துறை: பரிசில் துறை. 

புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.



சொல்லும் பொருளும்:


 நிவத்தல் - படர்தல்

பாசிலை - பசுமையான இலை

பல - பலா.

சேண் - தொலைதூரம்

மழை - மேகம்

மால் - மலை

அடுக்கம் - பக்க மலை

கழை - மூங்கில்

கல்லகம் - மலை

வெற்பு - மலை

செரு - போர்

கறங்கல் - ஒலித்தல்

 மடங்கா - குறையாத

உரை:
 

மலைநாட்டுத் தலைவா!

 

உன் நாட்டில், மேகங்கள்கூட எட்ட முடியாத அளவுக்கு உயரமான மலைகள் உள்ளன. அம்மலைகளின் உச்சியில் மூங்கில் காடுகள் உள்ளன. அந்தக் குளிர்ந்த மலைகளில் வளர்ந்த பசுமையான இலையையுடைய பலாவின் பழத்தைக் கவர்ந்து உண்ட கரிய விரலுடைய ஆண்குரங்கு, சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு, மலைச் சிகரத்தில் உள்ள மூங்கிலின் மேல் உறங்கும்.

போரில் பகைவரைத் தாக்கியதால் புலால் மற்றும் குருதிக் கறைபடிந்து நெருப்பைப்போல் சிவந்த நிறமுடைய வேலையையும், போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானைகளையும் ஒளிரும் மணிகளுடைய அணிகலன்களையும் உடைய விச்சிக்கோவே!

பூவைத் தலையில் வைத்ததைப்போல் உள்ள முல்லைக் கொடி ஒன்று படர்வதற்குக் கொழு கொம்பின்றி இருந்ததைக் கண்ட பாரி, அம்முல்லைக்கொடி தன்னைப் புகழந்து பாடாது என்பதை அறிந்திருந்தும், அக்கொடி படர்வதற்கு ஒலிக்கும் மணிகள் பொருந்திய தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்தான். இவர்கள் அத்தகைய பரந்த புகழுடைய பாரியின் சிறப்புடைய மகளிர். நான் பாடிப் பரிசுபெறும் அந்தணன். நீயோ, வாளால் பகைவருடன் போர் செய்யும் முறைகளை நன்கு அறிந்தவன். இவர்களை மணமகளிராகத் தருகிறேன். நீ இவர்களை ஏற்றுக்கொள்வாக.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...