Skip to main content

குற்றவுணர்ச்சியா? நமக்கா?

 எந்தத் தவறு அல்லது குற்றம் செய்தாலும் ஐரோப்பாவில் சட்டப்படியான விசாரணை முறை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைக்கு வந்துவிட்டது.


தவறு செய்யும் மனிதர்கள் பொது இடத்தில் கட்டிவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் தவறு செய்ததாகக் கருதப்பட்ட விலங்குகள், பறவைகளையும் கூட பிடித்து கட்டிவைத்து விசாரித்தனர். 


அந்த விசாரணையில் மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி, பறவைகள் ஆனாலும் சரி என்ன குற்றத்திற்காக அவர்கள் இங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது விளக்கப்பட்டு விசாரித்து தண்டனை வழங்கப்பட்டது.


மனிதர்களைக் கடித்து வெறிநாய்க்கடி நோய் வரவழைத்த குற்றத்துக்காக பல நாய்கள் இவ்வாறு பிடித்து நிறுத்தப்பட்டு அவைகள் செய்த குற்றம் என்ன என்பது (நாய்களுக்குத் தான்)  விளக்கிக் கூறப்பட்டது. விசாரிக்கப்பட்டு மற்றவர்களைக் கடித்தது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டு அந்த நாய்கள் அந்த விசாரணை செய்யப்பட்ட இடத்திலேயே தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டன. அதை hang dogs என்று சொல்லி வந்தனர்.


இதைவிட கொடுமையான ஒரு காமெடியும் அரங்கேறியது. 1487 ஆம் ஆண்டில் பிரான்சில் திராட்சைத் தோட்டத்தை வண்டுகள் வந்து நாசம் செய்துவிட்டன என்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வண்டுகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் முறையாக விசாரணை செய்யப்பட்டு வண்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்புக் கூறப்பட்டது.

அந்த வண்டுகளை எப்படி தூக்கில் போட்டனர் என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் எப்படியோ வண்டுகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. 


மனிதர்கள் இப்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பொது இடத்திலேயே விசாரணை நடைபெறும் என்பதால் அவமானத்தால் குறுகிப் போனார்கள். ஒருபுறம் அவமானம், ஒருபுறம் விசாரணை முடிந்தவுடன் தூக்கில் போடப்படுவோம் என்பது குறித்த பயம் என ஒரு வித்தியாசமான மனநிலையில் இருந்தனர். 


அந்த மனநிலையை hang dog expression என்று குறிப்பிடுகிறார்கள். 


இப்போது அந்தக் கடுமையான தண்டனை முறை இல்லை. ஆனால் செய்த தவறுக்கு அனுபவிக்கும் குற்றவுணர்ச்சியை hang dog expression என்று இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


நம் ஊரில் அப்படி எந்தக் குற்ற உணர்ச்சியும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.  

ஓட்டுப் போடக் காசு வாங்குவது கூட உரிமை என்று நினைக்கின்ற சமூகத்தில் திருடர்களுக்கு மட்டும் குற்ற உணர்ச்சி எங்கிருந்து வரும். திருடுவதும் கூடிய விரைவில் கடமையாகிப் போனாலும் போய்விடும் . இல்லையா?



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...