Skip to main content

ஏனடா இப்படி நினைத்தாய்?

 

விபீடணன் என்ன தான் போராடிப் பார்த்தும் சீதை மேல் கொண்ட மயக்கத்திலிருந்து இராவணன் விடுபடவில்லை.

 

இப்போது எல்லாம் முடிந்து போய்விட்டது.

 

இராவணன் இறந்து கிடக்கிறான்.

 

குப்புற விழுந்து கிடக்கிறான். அது அவன் நிலத்தைக் கட்டிப் பிடித்து கொண்டு கிடப்பது போல இருக்கிறது. 

 

விபீடணன் கதறி அழுகிறான். அந்தக் கதறலில் கம்பன் காட்டும் அழகு இது.

 

பெரும் வீரன் நீ -  


நீ பெற்ற வெற்றிகளால் போர்மகளைத் தழுவினாய்.

 

கற்ற கல்வியால் கலைமகளைத் தழுவினாய்.

 

பெற்ற பெருமைகளால் புகழ்மகளைத் தழுவினாய்.

 

இப்படி மற்றோர் பொறாமைப் படத் திகழ்ந்த நீ, சீர்மகளாய், சிறந்த கற்பின் பேர்மகளாய்த் திகழும் சீதையைத் தழுவ ஏனடா நினைத்தாய்?

 

எல்லாத் திசைகளின் யானைகளையெல்லாம் வென்ற பெருமைபெற்றுவிட்டு பெண்பித்தில் உயிரைத் துறந்து இன்று பார்மகளைத் (நிலமகளை) தழுவிக்கொண்டு கிடக்கிறாயே!

 

போர்மகளைகலைமகளைபுகழ்மகளைதழுவிய கை பொறாமை கூர,

சீர்மகளைதிருமகளைதேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்

பேர்மகளைதழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்

பார்மகளைத் தழுவினையோதிசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?'


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...