Skip to main content

விருந்தினரை எப்படி வரவேற்பது?

 

வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி வரவேற்பது என்பதற்கான ஒரு அல்கோரிதம்(algorithm)  இது.


1. வியந்து உரைத்தல்

 

    பார்த்து எவ்வளவு நாளாச்சு.


2. நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.


   வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா?


3.முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.

      அவர்களைப் பார்த்த சந்தோஷம் கண்ணில் தெரிய வேண்டும்.


4.வீட்டிற்குள் வருக என வரவேற்றல்

   உள்ளே வாங்க என்று அழைத்துச் செல்லுதல்


5.எதிரில் நிற்றல்.

    அவர் அமரும் வரை அவர் அருகில் நிற்றல்.


6.மனம் மகிழும்படி பேசுதல்

     தம்பி இந்த வருடம் எந்த வகுப்பு படிக்கிறான்?


7.அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்

   நீங்க  இருங்க. நான்   வந்துவிடுகிறேன்  என்றுசொல்லாமல் அருகே அமர்தல்


8.விடை பெறும்போது வாயில் வரை தொடர்ந்து செல்லுதல்.


   ஹாலில் இருந்தே கும்பிடு போட்டு அனுப்பி வைக்காமல் வாசல்வரைக்கும் கூடவே வரவேண்டும்.


9.முகமன் கூறி வழியனுப்புதல்.

      அடிக்கடி வாங்க. அடுத்த முறை குழந்தைகளையும்   கூட்டிட்டு வாங்க எனக் கூறி வழியனுப்ப வேண்டும். ' வாங்க ' என்ற சொல்லே  விடை கொடுக்கும்போது கூறிய சொல்லாக இருக்க வேண்டும்.


இது காசிக்காண்டம் என்ற நூலில் அதிவீரராம பாண்டியர் பாடிய பாடல் கூறும் செய்திகள்.


பாடல் :


விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்                     

திருந்துற நோக்கல் வருக என    உரைத்தல்                                       

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுறஇருத்தல்

                                                          

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்                                

ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

(அதிவீரராம பாண்டியர்)


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...