Skip to main content

உலகம் கொடுமையானதா?(புறநானூறு 194)

 


கொஞ்ச நேரம் வெறுங்காலில் நடக்கும் போது சின்ன முள் குத்தினால் கூட துடித்துப் போய்விடுகிறோம். பல மைல் தூரம் யாத்திரையாக நடந்து கோவிலுக்குச் செல்பவர்கள் காலெல்லாம் என்ன பூப்போட்டு வைத்த பாதையிலா நடந்து வருகின்றன?

ஒவ்வொரு முறை கல் குத்தும் போதும் வலி உயிர் போகும். ஆனால் அறிவில்லாத கடவுள் ஏன் தான் இந்தக் கல்லையும் முள்ளையும் படைத்தானோ என்று திட்டிக் கொண்டிருப்பதில்லை. திட்ட வேண்டிய கடவுளையே source ஆக எடுத்துக்கொண்டு அவனருள் இருந்தால் கல்லையும் முள்ளையும் கடந்து போய் விடலாம் என நினைப்பதற்கு பெயர் தான் பக்குவம். .


வாழ்க்கை என்றால் அதில் சுகங்களும் இருக்கும். சோகங்களும் வந்து போகத்தான் செய்யும். "எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது" என நினைத்துக் கொள்கிறோம் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பது புரியும் வரை.


இந்தப் பாடலின் அழகே கடவுளுக்கு அவ்வளவு விவரம் பத்தாது நீதான் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை தான்.


ஒரு வீட்டில் கல்யாணக் களை.

 

மற்றொரு வீட்டில் துக்க நிகழ்ச்சி.

 

பூ மாலை சூடும் மணமக்கள் ஒருபுறம்.

 

கணவனை இழந்த பெண்களின் கண்ணீர் ஒருபுறம்.

 

உலகத்தை இப்படிப் படைத்தவன் பண்பே இல்லாதவனாக இருப்பானோ?

 

உலகம் கொடுமையானது தான் என்பதை உணர்ந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கை என்றும் இனிமையானதாக மாறிவிடுகிறது.

பாடல்:


ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

(புறநானூறு 194)

 

பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார்.


திணை: பொதுவியல்.

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.


துறை: பொருண்மொழிக் காஞ்சி.

உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

சொல்லும் பொருளும்:


நெய்தல் - இரங்கற் பறை

கறங்கல் - ஒலித்தல்

ஈர் - இனிமை

தண் - அருள்

பைதல் - துன்பம்

உண்கண் - மை தீட்டிய கண்

வார்ப்பு- ஊற்றுதல்

உறைத்தல் - சொரிதல், உதிர்த்தல்

மன்ற - அசைச் சொல்

அம்ம - அசைச் சொல்

உரை: 

ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். ஆகவே, இந்த உலகத்தின் கொடிய தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.

 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...