Skip to main content

விளையாட்டுக்கள்

 

நம் குழந்தைகள் விளையாட கையில் எந்த பொருட்களைக் கொடுத்திருக்கிறோம்? பிளாஸ்டிக் பொம்மைகள், துப்பாக்கிகள், விதவிதமாய ஒலி ஒளி எழுப்பும் பொம்மைகள், சீன பொம்மைகள், கொரியன் விளையாட்டு பொருட்கள், Happy Birthday பாடல் பாடும் பொம்மைகள், டிராகன், கங்காரு பொம்மைகள் என்று நிறைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கிறோம்.


நம் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு நாட்டின் கலாச்சார விளையாட்டுப் பொருட்கள்.


கலை, பாரம்பரியம், கலாச்சாரம், உயிரோட்டம் மிக்க நம் நாட்டு விளையாட்டு பொருட்களைத் தொலைத்துவிட்டு வெளிநாட்டுக் கலாச்சார விளையாட்டு பொருட்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது கலாச்சார பொருட்களை நாமே நம் மையால் அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நம் நாட்டு விளையாட்டுப் பொருட்கள், மண் பொம்மை, மரப்பாச்சி, செப்புச் சாமான்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என ஒவ்வொரு மாநிலத்திற்கும், கலாச்சார பொருட்கள் நிறைய உண்டு.


பிள்ளையார், பிளாஸ்டிக் பிள்ளையார் ஆனதுபோல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நவீனத்திற்கு(பிளாஸ்டிக்) மாறியது. ஆனால், அதன் சிறப்பும், அழகும், அதில் இல்லாமல் போனது.

நம் நாட்டு விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் விளையாடும்போது, விளையாட்டோடு கதை சொல்லும் பழக்கமும் இருக்கிறது. சிங்கத்திற்கு ஒரு கதை, யானைக்கு ஒரு கதை, முயலுக்கு ஒரு கதை என்று விளையாட்டோடு கதை கேட்டு வளர்ந்தனர் குழந்தைகள். அந்த கதையை சொல்லக் கேட்பது ஒரு இசைதான்.

இன்று கதை சொல்வது அரிதாகிவிட்டது.

குழந்தைகளின் சண்டை உடனே மறந்து, ஒன்றாய் விளையாடுவார்கள். இப்போது நம் பிள்ளைகள் யுத்த விளையாட்டுப் பொருட்களுடன் சண்டை போட்டு விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஏற்பட்ட சண்டையே அடுத்த விளையாட்டிற்கு காரணமாகி சண்டை போட்டு சுட்டு விளையாடுகிறார்கள்.

நம் பிள்ளைகளை மண்சார்ந்த விளையாட்டுக்களை மறக்கடித்து, தொலைக்காட்சி, கணினி முன்னால் கட்டி வைத்திருக்கிறோம்.
நம் மண்ணின் விளையாட்டுக்கள் எத்தனை!

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என தேவநேயப்பாவாணர் தரும் பட்டியல் இது. இதில் பல விளையாட்டுக்கள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.மிச்சம் மீதியும் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும்.

 

1.கண்ணாம்பொத்தி(கண்ணா மூச்சி)
2. ஓடிப் பிடித்தல்
3. நின்றால் பிடித்தல்
4. வீடுகட்டி விளையாடல்
5. கூட்டான்சோறு ஆக்குதல்
6. கம்ப விளையாட்டு.
7. சூ விளையாட்டு.
8. கபடி
9. கோலி
10. குச்சு விளையாட்டு.
11. கிட்டிப் புள்
12 பேய்ப்பந்து.
13. பிள்ளையார் பந்து.
14. மரக்குரங்கு
15 காயா? பழமா?(தண்ணீரில் விளையாடல்)
16. பம்பரம்
17. கால்தூக்குகிற கணக்குப்பிள்ளை.
18. பூக்குதிரை.
19. பச்சக்குதிரை.
20 கிச்சுக்கிச்சு தாம்பலம்.
21. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்.
22. சாட் பூட் திரி
23. ஒருகுடம் தண்ணீர் ஊத்தி
24. பூப்பறிக்க வருகிறோம்.
25. குலை குலையாய் முந்திரிக்கா.
26. புலியும் ஆடும்(சங்கிலி புங்கிலி கதவைத் திற; நான் மாட்டேன் வேங்கைப்புலி)
27. நொண்டி.
28. கிளித்தட்டு(உப்பு எடுத்தல்).
29. பண்ணாங்குழி(பல்லாங்குழி)
30. பாண்டி(சில்லு விளையாட்டு)
31. கும்மி.
32. ஊஞ்சல்(மரத்தில் கட்டி விளையாடல்)
33.பருப்புச் சட்டி.
34. மோதிரம் வைத்தல்.
35. மண் வண்டி விளையாட்டு.
35. தட்டாம் பிடித்தல்.
37. ஓணா அடித்தல்.
38. தாயம்.
39. பரமபதம்.
40. குழந்தை திருவிழா விளையாட்டு(கிராம தேவதையை களி மண்ணால் செய்து குழந்தைகள் திருவிழா எடுத்தல்)
41. ஒத்தையா ரெட்டையா.
42 ஆடுபுலி ஆட்டம்.
43. சிலம்பாட்டம்.
45. உரி அடித்தல்.


மண் சார்ந்த விளையாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. நம் விளையாட்டுக்களில் காலை, மதியம், மாலை, இரவு, வயல், வெளி, குளம், ஆறு என்றும் சிறுவர், சிறுமி, இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களும் உண்டு. பெரும்பாலான விளையாட்டுக்களுக்கு பாடல் உண்டு. விளையாட்டை முதலில் துவங்குவது யார்? என்பதற்கே பல விளையாட்டுக்கள் உள்ளன. தோற்றவருக்கு தண்டனையாக பல விளையாட்டுக்களும் உள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மண்சார்ந்த விளையாட்டுக்கள் நிறைய உண்டு. ஆனால், வெளிநாட்டு விளையாட்டும், விளையாட்டு பொம்மைகளும் விளையாட்டாகவே நம் நாட்டு விளையாட்டையும், விளையாட்டு பொம்மைகளையும் அழித்துவிட்டன.

நம் பிள்ளைகள் மண்ணைத் தொடாமலே மண்ணின் மணம், குணம் அறியாமலே வளர்கிறார்கள். வீதியெங்கும், காங்கிரீட் சாலை போட்டு மழலைகள் மண்ணை மிதிக்க முடியாமலும், மழை மண்ணைத் தொட முடியாமலும் செய்துகொண்டிருக்கிறோம்.

ஓடி விளையாட அக்குழந்தைகளுக்கு ஆவல்தான். எங்கே ஓடி விளையாடுவது? எங்கே இடம் இருக்கிறது? குழந்தைகளை மண்ணில் விளையாட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை


நம் பெற்றோர்களிடத்தில், என்னை ஏன் இந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை? இந்தக் கல்லூரியில் என்னை சேர்த்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என்று நாம் கேட்பது போல், நம் பிள்ளைகள் நம் நாட்டு கலாச்சார விளையாட்டுப் பொருட்களை ஏன் எனக்கு விளையாட வாங்கித் தரவில்லை? எனக்கு ஏன் சிலம்பாட்டம் கற்றுத் தரவில்லை? ஏன் விளையாட விடவில்லை என்று நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் நாள்  வரும்.

விஞ்ஞான வளர்ச்சியில் முன் அணியில் இருக்கும் நாம், மாறிவரும் காலத்திற்கே   பாடல் பாடவைக்க முடியாதா?

மரப்பாச்சி பொம்மை - என்னமா தோழி பொம்மையை காணும் பாடல் பாடச் செய்ய முடியாதா?

மரயானை - பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடாதா?
ஆமை - நான் வீட்டுப்படி ஏறி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பாட முடியாதா?

தலையாட்டி பொம்மை - தலையாட்டி தலையாட்டி வாழாதே பாடல் பாடவைக்க நம்மால் முடியாதா?

இந்தியநாட்டு கலாச்சார பொம்மைகள் எப்போது தாய்மொழியில் பேசும்?
நம் தாய் மொழியில் பேசும் பொம்மைகளை நம் நாட்டிலும், வெளி நாட்டிலும் எப்போது நாம் விற்பனை செய்யப்போகிறோம்?


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...