Skip to main content

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக...

 


இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக

மங்கை உருகி நின்றாள்


என்று ஒரு பாடல் வரி கேட்டிருப்போம்.


மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்களை மெழுகுவர்த்திக்கு ஒப்பிடுவதுண்டு. 


தான் படிக்க விரும்பினாலும் தன்னுடைய தம்பி தங்கை படிக்க வைக்க  வேலைக்குப் போகின்ற அண்ணனை  மெழுகுவர்த்தியாக உருகுகிறான் என்று சொல்வதுண்டு.


ஊன் உறக்கம் இல்லாமல் கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்றெல்லாம் இறை அனுபவத்தைப் பாடுவார்கள்.


காதலில் சிக்கிக் கொண்டவர்களும் கூட அப்படித்தான் உருகிப் போவார்கள்.  


ஒற்றைத் திரியில் உருகும் மகிழ்ச்சி தன்னைத் தியாகம் செய்கிறது. அப்படி இருக்க இரண்டு புறமும் பற்றி எரிகின்ற மெழுகுவர்த்தி எப்படி இருக்கும்? 


பகலிலும் வேலைக்கு போய்விட்டு வந்து இரவிலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றவர்களை அப்படிச் சொல்வார்கள். 


இந்த இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகுவர்த்தி வாழ்க்கையை burn the candle at both ends என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  அதாவது தன்னுடைய மொத்த சக்தியையும் செலவு செய்யும் நிலை தான் அது.   





Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...