Skip to main content

எவ்வளவு கோபம்?

 கோபப்படுகின்றவர்கள் தங்களைச் சுற்றிலும் எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  உடன் இருப்பவர்கள் கூட அவர்களுடன் இயல்பாகப் பழக அச்சம் கொள்வர். 

 அதனால் கோபப்படுகின்றவர் படிப்படியாக  மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்.

கோபப்படும் போது பல நரம்புகள் அதீதமாகச் செயல்படுகின்றன. 

அதிகப்படியான கோபத்தால் நரம்புகள் விரைவில் செயல் இழந்து விடுகின்ற நிலை வந்து விடுகிறது.  


'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்று கூறுகிறது திருக்குறள். 


 கோபத்தின் இந்த சுட்டெரிக்கும் தன்மையை மனப் பதட்டம் மட்டும் அல்லாமல் உடல் வெப்பநிலை அதிகரிப்பதைக் கொண்டும் உணரலாம். இதயத் துடிப்பு எகிறும் நிலை கூட வரும். 

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படிப் பார்ப்போம்? பொதுவாகக் கழுத்துக்குள் தொட்டுப் பார்த்து காய்ச்சல் இருப்பதை கண்டுபிடிப்போம். அது போலவே கோபப்பட்டவுடன் தொட்டுப்பார்க்க வேண்டும். 

கழுத்து, சட்டையின் collar பகுதியில் இருப்பதால், கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப்படும் நிலையை ஆங்கிலத்தில் hot under the collar என்று கூறுவார்கள்


hot under the collar என்பதற்கு dictionary கூறும் பொருள்:


hot under the collar- embarrassed or angry about something


Examples for the usage:


We disagree with each other from time to time, and we both get a little hot under the collar.


When I pointed out his mistake in the sum he got hot under the collar.






Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...