Skip to main content

Posts

Showing posts from February, 2022

பாரி மகளிர் இவர்கள்.(புறநானூறு 200)

  பாரி மன்னன் இறந்த பின்பு பாரி மன்னனின் மகள்களை மணம் புரிய மன்னன் விச்சிக்கோவிடம் கபிலர் கேட்டுக் கொண்டது இப்பாடல் வழியே ... பாடல்   கூறும்   செய்தி   இதுதான் : மன்னா இவர்கள் பாரியின் பெண் குழந்தைகள் . முல்லைக்கொடி தன்னை பாடாத போதும் அதற்கு தேரையே அளித்த மன்னன்   பாரியி ன்   பெண்கள் இவர்கள் .   நான் பரிசு கேட்க வந்தவன்; அந்தணன் .   வாள் திறத்தால் பகைவர்களை வென்ற மன்னனே! இந்தப் பெண்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன் . பாடல்:   பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக் கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப, நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல் களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே, இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்...

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக...

  இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் என்று ஒரு பாடல் வரி கேட்டிருப்போம். மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்களை மெழுகுவர்த்திக்கு ஒப்பிடுவதுண்டு.  தான் படிக்க விரும்பினாலும் தன்னுடைய தம்பி தங்கை படிக்க வைக்க  வேலைக்குப் போகின்ற அண்ணனை  மெழுகுவர்த்தியாக உருகுகிறான் என்று சொல்வதுண்டு. ஊன் உறக்கம் இல்லாமல் கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்றெல்லாம் இறை அனுபவத்தைப் பாடுவார்கள். காதலில் சிக்கிக் கொண்டவர்களும் கூட அப்படித்தான் உருகிப் போவார்கள்.   ஒற்றைத் திரியில் உருகும் மகிழ்ச்சி தன்னைத் தியாகம் செய்கிறது. அப்படி இருக்க இரண்டு புறமும் பற்றி எரிகின்ற மெழுகுவர்த்தி எப்படி இருக்கும்?  பகலிலும் வேலைக்கு போய்விட்டு வந்து இரவிலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றவர்களை அப்படிச் சொல்வார்கள்.  இந்த இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகுவர்த்தி வாழ்க்கையை burn the candle at both ends என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  அதாவது தன்னுடைய மொத்த சக்தியையும் செலவு செய்யும் நிலை தான் அது.   

கடவுள் ஆலம்(புறநானூறு 199)

  ஆலமரத்தில் அன்றாடம் பறவைகள்.   நேற்று தானே ஆலம்பழம் சாப்பிட்டோம் என்று இன்று பறவைகள் வராமல் இருப்பதில்லை   அப்படித்தான் நாங்களும்.   மரத்தில் பழம் இருந்தால் பறவைகளுக்கு உணவு. மரம் வெறுமையானால் பறவைகளும் பட்டினி.   அப்படித்தான் மன்னனின் செல்வம் எங்களின் வளமை. மன்னனின் வறுமை எமக்கும் வறுமை. பாடல்: கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருநல் உண்டனம் என்னாது பின்னும் செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் உடைமை ஆகும்அவர் உடைமை; அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே. (புறநானூறு 199)   பாடியவர்:  பெரும்பதுமனார். திணை:  பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது. துறை:  பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது பரிசில் வேண்டும் விருப்பத்தை  புரவலரிடம்  வெளிப்படுத்துவது. சொல்லும் பொருளும்: தடவு = பெரிய  சினை = மரக்கொம்பு  நெருநல் = நேற்று ஆனா – அமையாது கலி – ஒலி ப...

நீ மென்மை தான்

  அனிச்ச மலரே நீ மென்மை தான். உனக்கொன்று சொல்லவா உன்னை விடவும் மென்மையானவள் என்னவள். நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். (திருக்குறள் 1111)  விளக்கம்: அனிச்சப்பூவே நல்ல மென்மைத் தன்மை பெற்றிருக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை கொண்டவள். (மு.வரதராசன்)

அருவி தாழ்ந்த பெருவரை போல(புறநானூறு 198)

மழைத் துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலை நாடி வந்திருக்கிறேன் . என்னை ஆதரி என்று கூறுகிறது இந்தப் பாடல் . பாடல்   கூறும்   செய்தி   இதுதான் : மன்னா ,    அருவிவிழும் மலை போல முத்துமாலை தவழ விளங்குகிறது உன் மார்பு .   உன் மனைவி மக்களோடு நீ வாழ்க என்று கனவிலும் கூட உன்னை வாழ்த்தினேன் .   சிவபெருமான் போல உன் செல்வாக்கு எங்கும் பரவியிருக்கிறது .   சிறப்பான வெற்றிகள் ஓடு நீயும் உன் புதல்வர்கள் நீண்ட நாள் வாழ்க .   நான் சொந்த பந்தம் இல்லாதவன் . பக்கத்து நாட்டுக்காரன் . மழைத்துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலுக்கு வந்திருக்கிறேன் .  என்னை ஆதரித்து அருள வேண்டும் .  பாடல்: அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக் கடவுள் சான்ற கற்பின் சேயிழை மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித் திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக் காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம் ...

அப்படிப் பார்த்ததால் தான்...

  நேராக என்னைப் பார்த்திருந்தால் எதுவுமாகியிருக்காது எனக்கு ஒரு கண்ணைச் சாய்த்து உதட்டோரம் கொஞ்சம் சிரித்தாள் அதுதான் …   குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.  ( திருக்குறள்)

அறிவுள்ளவர்களையே வாழ்த்தி மகிழ்வோம்(புறநானூறு 197)

  பணம் காசல்ல , அன்பு தான் நிலைக்கும் என்ற செய்தியை ஆழமாக சொல்கிறது இந்தப் பாடல் . பாடல்   கூறும்   செய்தி   இதுதான் : காற்று வேகத்தில் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்கள் , கடல் போன்ற படைகள் , மலைபோல் யானைகள் என போரில் வெற்றி பெறுகின்ற மாமன்னர்களைப் பார்த்து வியப்படைய ஒன்றும் இல்லை . சிறிய ஊரை ஆளுகின்ற மன்னர் என்றாலும் எங்கள் மேல் அன்பு பாராட்டுபவர்களை  நினைத்துத் தான் வியக்கிறோம் .  பெருஞ்செல்வம் இருக்கிறது என்பதற்காக எத்தனை துன்பத்திலும் அன்பில்லாதவர்களிடம் செல்லக்கூடாது .  வறுமையில் வாடினாலும் அறிவுள்ளவர்களையே வாழ்த்தி மகிழ்வோம் . பாடல்: வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக் கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண...