Skip to main content

ஜூலை 27


 ஜூலை 27,1876

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சொற்பொழிவுகளும், உரைநடைகளும் புகழ் பெற்றவை.  'கவிமணியின் உரைமணிகள்'  என்ற தலைப்பில் அவை நூல் வடிவம் பெற்றுள்ளன. 

உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள்.  மருமக்கள் வழி மான்மியம் எனும் இவரது  கவிதை நூல் புகழ் பெற்ற   ஒன்றாகும்.  கவிதைக்கு இலக்கணம் சொன்னவர்  கவிமணி. 

கவிதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை அவரின் இந்தக் கவிதை.

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை.

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.

ஜூலை 27,1877

நவீன அணுக்கொள்கையின் தந்தை எனக் கருதப்படுகின்ற ஜான் டால்டன் மான்செஸ்டரில் காலமானார்.

ஜூலை 27,1879

நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள்.

வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். 

வழக்கறிஞராகப் பணியாற்றி  மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த போதும் வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதைச்  செய்தார்.

ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் அப்போது பாதிப்பை ஏற்படுத்தியது. 

 ஜூலை 27,1907

சிறுகதை ஆசிரியர் மௌனி பிறந்த நாள். 

மணிக்கொடி பத்திரிக்கையும் குறிப்பாக பிஎஸ் ராமையாவும் தான் எஸ்.மணி என்று சுகவாசியாக இருந்த சிறுநகர இளைஞன் மௌனி என்ற எழுத்தாளராக மாறக் காரணம்.

 அவர் எழுதிய எல்லாச் சிறுகதைகளையும் படிக்க வெறும் இரண்டு மணி நேரம் போதும். இவ்வளவு குறைந்த படைப்புகளைத் தந்த போதும்,  20ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் எல்லாத் தமிழ் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தவறாமல் மௌனியைக் குறிப்பிடுகிறார்கள். 

அது தான் அவர் எழுத்தின் வலிமை. 

மௌனி ஒன்றும் பண்டிதர் போன்று தமிழ் படித்தவர் அல்ல. அவர் படித்தது கணக்கு மட்டும் தான். 

அவர் அறிந்த அன்றாட வாழ்க்கைத் தமிழ் தான் அவருடைய இலக்கியத் தமிழும்.  

அன்றாட மொழி நடைக்கு  விசேஷ பரிமாணங்களை அளித்து எழுதியது தான் மௌனி எழுத்தின் சிறப்பம்சம். 

1985 ஜூன் மாதம் 7 ஆம் தேதி அவர் மறைந்தார். 

ஜூலை 27,1963

புகழ் பெற்ற திரைப்படப் பின்னணிப்  பாடகி சின்னக்குயில் சித்ரா பிறந்த தினம்.  


ஜூலை 27,1963

தமிழறிஞர் மற்றும்  திரைப்படப் பாடலாசிரியர் ச.து.சு.யோகி மறைந்த நாள். 

 ஜூலை 27,1987

இந்தியப் பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி மறைந்த தினம். 

ஜூலை 27,2016

அப்துல் கலாம் மறைந்த நாள். 

 ஜூலை 27,2016

கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்த தினம்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...