Skip to main content

ஜூலை 6

 ஜூலை  6, 1870

பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்

மதுரை அருகே விளாச்சேரியில் கோவிந்த சிவனார்-லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. பின்னாளில் தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டவர் இவர் .

 ‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர், அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜூலை  6, 1870

பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டியர்  தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியால் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனைக் கொண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

ஜூலை  6, 1885

பிரான்ஸைச் சேர்ந்த லூயீ பாஸ்டியர் (Louis Pasteur) வெறி நாய்க்கடிக்கு 14 நாட்கள் தொடர்ந்து ஊசி மூலம் செலுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார். 

ஜூலை  6, 1892

தாதாபாய் நௌரோஜி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை 6, 1928

உலகின் முதல் பேசும் படமான லைட்ஸ் ஆப் நியூயார்க் என்னும் திரைப்படம் நியூயார்க்கில் இன்று திரையிடப்பட்டது.

ஜூலை  6, 1930 

பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் எம்.பாலமுரளிகிருஷ்ணா பிறந்த தினம். 


பாலசந்தரின் ‘நூல்வேலி’ படத்தில், ‘
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே’ பாடல் ...

’கவிக்குயில்’ படத்தில் இளையராஜா இசையில் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ ...

திருவிளையாடல் படத்தில் K.V. மகாதேவன் இசையில் வரும் 'ஒரு நாள் போதுமா' பாடல்...

என காற்றில் காலமெல்லாம் வாழும் குரலுக்குச் சொந்தக்காரர் இவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கு இசை கற்றுக் கொடுத்த ஆசிரியர் பால முரளிகிருஷ்ணா.

பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட எத்தனையோ விருதுகள் பெற்ற போதும் புகழுக்கு மயங்காத மாமேதை இவர்.

ஜூலை 6, 1935

சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

ஜூலை 6, 1935 

தலாய் லாமா என்று அழைக்கப்படும் திபெத்திய பௌத்தத்தின் 14-ஆவது தலாய் லாமா இன்று வடகிழக்கு திபெத்தின் அம்டோவில் உள்ள தக்ட்ஸரில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஜூலை 6, 1944 

 காந்தியை தேசத்தந்தை என்ற அடைமொழியுடன் நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ் முதன் முதலாக இன்று தான்  அழைத்தார். 

ஜூலை 6, 1947 

சோவியத் யூனியன்  ஏகே-47 துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியது. 

ஜூலை 6, 1947 

தமிழில் நவீனக் கவிதைகளில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர் ஆத்மாநாம் இன்று மறைந்தார். 

மனச் சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூலை 6, 1968 

குழந்தை இலக்கிய முன்னோடி  மயிலை சிவமுத்து இன்று காலமானார்.

ஜூலை 6, 1986

இந்தியாவின் ரயில்வே அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜகஜீவன் ராம் காலமானார்.

ஜூலை 6, 2002

ரிலையன்ஸ் நிறுவனங்களின் ஆணிவேராக விளங்கும் திருபாய் அம்பானி இன்று மறைந்தார். 

ஜூலை 6, 2011

இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைந்த நாள். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...