Skip to main content

ஜூலை 18

 

ஜூலை 18, 1857 

சென்னைப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்கள் ஆகியவை இன்று நிறுவப்பட்டன.

ஜூலை 18, 1898 

கதிரியக்கமுடைய ஒரு தனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு போலோனியம் என்று பெயரிட வேண்டும் என்றும் மேரி கியூரியும் அவரது கணவர் பியாரி கியூரியும் பாரிஸ் அகாடமி ஆப் சயின்ஸ்க்கு அறிவித்தனர்.

ஜூலை 18, 1918 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்  தலைவரும் தன் வாழ்நாளில்  27 வருடங்களை சிறையில் கழித்தவருமான நெல்சன் மண்டேலா இன்று தான் பிறந்தார். 

ஜூலை 18, 1925

ஹிட்லரின் 'மெயின் காம்ப்' என்னும் நூல் வெளியிடப்பட்டது.

ஜூலை 18, 1968

இன்டெல் நிறுவனம் மவுண்ட் கலிபோர்னியாவில் இன்று நிறுவப்பட்டது.

ஜூலை 18, 1974

தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த  எஸ். வி. ரங்கராவ்  மறைந்த தினம். 

தன்னுடைய உண்மையான வயதை விட அதிகமான வயது கதாபாத்திரங்களிலேயே நடித்த பெருமைக்குரியவர் அவர். 

ஜூலை 18, 2013

கவிஞர் வாலி மறைந்த தினம்.  

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.

                                                 - வாலி

All my desires I want to tell, go untold,

All the instants I open to tell, the shyness sets in.

All the day my legs walk on his footprints,

Throughout, only my thoughts fill my eyes, don't know why.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...