Skip to main content

ஆகஸ்ட் 1


 ஆகஸ்ட்  1, 1763                       

உலகிலேயே முதல் முறையாக மெட்ரிக்  முறை(Metric System) என்று சொல்லப்படும் மீட்டர், சென்டிமீட்டர் போன்ற இப்போது நாம் பயன்படுத்தும் அளவு முறை பிரான்ஸ் நாட்டில் இன்று அமலுக்கு வந்தது.

ஆகஸ்ட்  1, 1774                       

ஆக்ஜிசன்(Oxygen) என்பது ஒரு வாயு தான் என்று ஜோசப்  ப்ரிஸ்ட்லி என்ற வேதியியல் அறிஞர்  இன்று தான் முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கூறினார். 

அவர் oxygen என்ற பெயரை அதற்கு வைக்கவில்லை. அவர் முதலில் வைத்த பெயர் ‘dephlogisticated air’. . பிறகு தான் அது oxygen என மாற்றப்பட்டது.  

ஆகஸ்ட் 1, 1861

முதன்முதலாக செய்தித்தாளில் வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முன்னறிவிப்பு அட்மிரல் ராபர்ட் (Admiral Robert Fitzroy) என்பவரால் தயாரிக்கப்பட்டது. 

சார்லஸ் டார்வின் இயற்கை குறித்த தன்னுடைய ஆராய்ச்சிக்காக கப்பல் பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்தக் கப்பலின் மாலுமியாக  இருந்தவர் இவர் தான். 

ஆகஸ்ட்  1, 1876 

பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் டைகர் வரதாச்சாரியார் இன்று பிறந்தார்.  

ஆகஸ்ட்  1, 1907

சாரண இயக்கத்தின் முதல்  கேம்ப்பை(முகாம்) பேடன் பவல் இங்கிலாந்தில் இன்று  ஆரம்பித்து வைத்தார்.  
இன்று  தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடந்தது இந்த கேம்ப்.

ஆகஸ்ட்  1, 1916   

அன்னி பெசன்ட் இன்று ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். 

ஆகஸ்ட்  1, 1920  


 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மறைந்த நாள்.

ஆகஸ்ட்  1, 1920


காந்தி இன்று ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

ஆகஸ்ட்  1, 1944

குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைக் கொண்டிருக்கும் திரைப்பட, நாடக நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...