Skip to main content

ஜூலை 14

ஜூலை 14,1789 

பிரெஞ்சுப்புரட்சி தொடங்கிய நாள் இன்று.

ஜூலை 14,1867

ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் இன்று டைனமைட்டின் செயல் விளக்கத்தைச் செய்து காட்டினார். 

ஜூலை 14,1929

 பொறியாளரும் தமிழறிஞருமான வா. செ. குழந்தைசாமி பிறந்த நாள்.

ஜூலை 14,1964

சுவாமி சிவானந்தர் மறைந்த தினம்.

ஜூலை 14,2015

திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் மறைந்த நாள்.

அப்போதெல்லாம் திரையிசை என்றால் அது முழுக்க முழுக்க பாரம்பரிய இசையான கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, கிளாஸிக்கலாக இருந்த காலம். 

அப்படி இருந்த திரையிசையை, கொஞ்சம் மாற்றி லைட் கிளாஸிக்கலாகவும், கொஞ்சம் வெஸ்டர்னைஸாகவும்  ராக அடிப்படை மாறாமல்  அனைவரும் விரும்பிக் கேட்கும் வகையில் மெல்லிசையாகத்  தந்து வெற்றி கண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.  

அதனாலேயே மெல்லிசை மன்னர் என்ற அடைமொழியால் அவர் அழைக்கப்பட்டார். 

"நீராரும் கடலுடுத்த" என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி.

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்  இவரால் தான் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.  

"தீர்க்க சுமங்கலி" திரைப்படத்தில் வரும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற எம்.எஸ்.வி பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு வாணி ஜெயராம் அறிமுகமானார்.

"எம்எஸ்வி.யை சந்திப்பதற்கு முன் எனக்கு சோற்றுக்கே வழியில்லை. அவரை சந்தித்த பின் எனக்கு சாப்பிட நேரமில்லை" என்று கவிஞர் வாலி  ஒரு முறை மேடையில் சொன்னார். 

மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் கூட  எம்.எஸ்.வி இசையில் ஷெனாய்  வாசித்திருக்கிறார். 

"பாலும் பழமும்" திரைப்படத்தில் வரும் "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலில் ஒலிக்கும் ஷெனாய் இசை பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசை தான். 

கவிஞர் கண்ணதாசன்- எம்.எஸ்.வி  கூட்டணி ஒரு இசை ராஜாங்கமே நடத்திவந்தது. 

கண்ணதாசன் பிறந்த நாளும் இவர் பிறந்த நாளும் ஒரே நாள்.

1928-ஜூன் 24 அன்று   பிறந்த அவர், இன்று மறைந்தார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...