Skip to main content

சூடுபட்ட பூனை

தெனாலிராமன் கதைகளில் இது ஒரு கதை.

விஜய நகரத்திலுள்ள எலித் தொல்லைக்காக ஆயிரக்கணக்கில் பூனைக் குட்டிகள் வயநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன.  ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையும்  அதை    வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுக்கப்பட்டது.


தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான். 


குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். 


தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன தன் பூனையைக் காட்டினான். அதைக் கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார். 


அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.


அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர்  அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.


பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது. வியப்புடன்  அதைப் பற்றி விசாரித்தபோது தான் ஒரு உண்மை தெரிந்தது.   ஒரு நாள் சுடச்சுடக் காய்ச்சிய பாலை அவசரமாகக் குடித்த பூனை அதன் பின்  பாலைக் கண்டதும் சூடுபட்ட பழைய அனுபவத்தால் குடிக்கத் தயங்கியது.


பூனைக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் கூட இந்த நினைவுப் பதிவுகள் இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு செயலிலும் முன்பு செய்த செயலுக்கான வெற்றியோ தோல்வியோ கூடவே வந்து ஒரு தாக்கத்தை மனதிற்குள் உருவாக்குமாம்.


ஆங்கிலத்தில் அதை once bitten twice shy என்று சொல்கிறார்கள்.


ஒரு முறை தெரு நாய்க்கடி வாங்கியிருந்தால் பார்க்கிற நாயெல்லாம் கடிக்க வருவது போலவே இருக்கும். 


"அன்னைக்குக் கூட அப்படித்தான்" என்று நாம் சொல்ல ஆரம்பிக்கும் அல்லது நமக்குச் சொல்ல ஆரம்பிக்கப்படும் அனுபவங்கள் எல்லாம் இந்த ரகமாகத் தான் இருக்கும்.


அப்படி பழைய அனுபவங்களால் வரும் தயக்கம் அப்படியே இருக்க சிலரோ அதே போல மறுபடி மறுபடி அனுபவிப்பார்கள். அவர்களைப் பார்த்து "பட்டாலும் உனக்குப் புத்தி வராதா?" என்று திட்டுவதைப் பார்த்திருப்போம். நாமே கூட அப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கவும் வாய்ப்புண்டு.


அப்படித் திட்டும் போது சொல்லும் 'பட்டாலும்' என்பது 'சூடுபட்டாலும்' என்பதன் சுருக்கம் தானே.  


இன்னும் கொஞ்சம் காரமாகத் திட்டுபவர்கள் ''சூடுபட்டாலும்" என்பதற்குப் பதிலாக "சுட்டுப் போட்டாலும்" என்று சொல்வதுண்டு. 


சூடுபட்டாலும் light tea என்றால் சுட்டுப் போட்டாலும் கொஞ்சம் strong. அவ்வளவு தான். 






Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...