Skip to main content

ஜூலை 12


12 சூலை 1928 – 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள்  துணைவேந்தரான  மு.அனந்தகிருஷ்ணன் பிறந்த நாள்.

தற்போது இன்ஜினியரிங் சேர்க்கைக்கு இன்டர்நெட் வழியாக நடக்கும் ஒற்றைச் சாளர முறையை (Single Window System) அறிமுகப்படுத்தியவர் இவர் தான். 

அதற்கு முன்பு ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பம் வாங்கி தனித்தனியே விண்ணப்பித்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்த மாணவர்களுக்கு இவர் வழங்கிய தீர்வு எந்தக் காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்று.  

இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கொண்டே பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்ய முடிகிறது என்றால் அதற்கான முதல் புள்ளி இவர் வைத்ததுதான்.  

பத்மஸ்ரீ விருது பெற்றவர் இவர். 

ஜூலை 12,1975

திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்த நாள்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய் 

என்று மகளின் அன்பை ரசிக்கும் அப்பாவுக்கு எழுதிய பாட்டால் தேசிய  விருதை மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இதயங்களையும் வென்றவர்.

கவனம் பெறாமல் இருந்த தந்தையின் அன்புக்கு ,

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் 

தந்தை அன்பின் முன்னே 

தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் 

தந்தை அன்பின் பின்னே'

என்று வார்த்தைகளில் வடிவம் தந்தவர் இவர்.

வாழ்ந்ததென்னவோ கொஞ்சகாலம் தான் ...

அந்தக் கொஞ்ச காலத்துக்குள் எப்போதும் நிலைத்திருக்கும் பாடல்களை தந்து மறைந்தவர். 

ஜூலை 12,1997

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கு 1993 ஆம் ஆண்டிற்கான ராமன் மேகஸஹாய் விருது வழங்கப்பட்டது.

ஜூலை 12,1997

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண் மலாலா  பிறந்த நாள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...