Skip to main content

ஜூலை 20

ஜூலை 20,1903

போர்டு நிறுவனம் தனது முதலாவது காரை இன்று ஏற்றுமதி செய்தது.

ஜூலை 20,1920

சீதாமலைக்கும் பாலமலைக்கும் இடையே இன்று தான் மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் 5300 அடி உயரம் 176 அடி.

ஜூலை 20,1937

வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி இன்று ரோம் நகரில் காலமானார்.

ஜூலை 20,1960 

சிறிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். 

உலகிலேயே முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதமர் என்ற சாதனைக்கு இன்று சொந்தக்காரர் ஆனார் அவர்.

ஜூலை 20,1969

நீல் ஆம்ஸ்ட்ராங் , எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில்  காலடி வைத்தனர்.

நாசாவின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இறங்கிய அவர்கள் நிலவில் இறங்கிய முதல் மனிதர்கள் என்ற பெருமையை இன்று பெற்றனர். 

ஜூலை 20,1919

உலகின் மிக உயரமான சிகரமான எவெரெஸ்ட்டின் உச்சியை அடைந்த முதல் மனிதர்கள் டென்சிங் மற்றும் ஹில்லாரி ஆகிய இருவர். 

அந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹிலாரி இன்று தான் பிறந்தார். 

முதன் முதலில் உலகின் தென் துருவத்தை அடைந்தவர் என்ற பெருமைக்குரியவரும் இதே ஹிலாரி தான்.  

உலகின்  வட துருவம், தென் துருவம் என்ற இரண்டையும் அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றவர் இவர். 

ஹிலாரி  தன்னுடைய 33ம் வயதில், மே 29 1953ம் நாள் அன்று  நேபாள நாட்டைச் சேர்ந்த  டென்சிங்குடன்  சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். 

11 ஜனவரி 2008 அன்று மறைந்தார். 

ஜூலை 20,1920 

இராமகிருஷ்ணரின் துணைவியார்  சாரதா தேவி அம்மையார் இன்று மறைந்தார்.

ஜூலை 20,1937

வானொலியைக் கண்டுபிடித்தவரும்  நோபல் பரிசு பெற்றவருமான  இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி இன்று மறைந்தார்.  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...