Skip to main content

காதல் சிறகை காற்றினில் விரித்து

 

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்.


மென்மையான சாரல் மழை...


எங்கும் குளிர்ச்சியாக இருக்கிறது.


எங்கள் ஊரெல்லாம் பச்சைப் பசேலென இருக்கிறது. 


கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது. 


புதிதாக திருமணம் ஆகி வந்த சில நாட்களில் என்னை விட்டு வேலை காரணமாக அவன் பிரிந்து போக வேண்டி இருந்தது. 


அவனும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இதோ இன்று வந்துவிட்டான்.


அவனைக் கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்ளவேண்டும் போல ஆசை.


இத்தனை காலம் பிரிந்திருந்ததை எண்ணி கண்ணீர் பொங்கி வருகிறது. 


கண்ணைத் துடைத்துக் கொள்கிறேன். 


அவனோ மெல்லச் சிரிக்கிறான். 


என் கண்ணை நினைத்து எனக்கே வெட்கம் வருகிறது. 


அவன் பிரிந்து போகும் போது கண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவனைக் கண்ட பின்பு கண்ணீர் வருகிறது.  


 "இந்தக் கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே " 


நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு

சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன

கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ

நுண்ணுறை யழி துளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.


(குறுந்தொகை)


பொருள்


நாணில - நாணம் இல்லை


வெங் கண்ணே - என் கண்ணே


நாணேர்பு - அவர் பிரிந்து சென்ற நாளை ஏற்றுக் கொண்டு


சினைப்பசும்பாம்பின்-  கருக் கொண்டபச்சைப் பாம்பின்


சூன் -  கரு


முதிர்ப் பன்ன -முதிர்ந்த போது. 


கனைத்த -வளர்ந்த


கூம்பு - தோகை


பொதி யவிழ -விரித்து நிற்க


நுண்ணுறை - மெல்லிய 


யழி துளி - மழைத்துளி


தலைஇய - பெய்ய


தண்வரல் வாடையும் - குளிர்ந்த வாடை காற்று 


பிரிந்திசினோர்க்கு - பிரிந்து வாழும் தலைவருக்கு 


அழலே- அழுவதே 


இதே உணர்வு கண்ணதாசன் வரிகளில் ...


காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர்க் கடலில்

குளிக்கவா 


எண்ணங்களாலே

பாலம் அமைத்து இரவும்

பகலும் நடக்கவா


இத்தனை

காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா


முதல் நாள்

காணும் திருமணப் 

பெண்போல் முகத்தை

மறைத்தல் வேண்டுமா 


முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும்

சேர்ந்திடும்போது அழுதால்

கொஞ்சம் நிம்மதி 


பேச மறந்து

சிலையாய் இருந்தால் பேச

மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதலின் சன்னிதி 

(கண்ணதாசன்)


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...