Skip to main content

ஜூலை 8

ஜூலை 8,1497 

170 பேருடன் ஐரோப்பாவிலிருந்து கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிய வாஸ்கோடகாமா வெற்றிகரமாக இன்று இந்தியாவில் காலடி வைத்ததால்  வரலாற்றில் இடம்பெற்றார். 

ஜூலை 8,1806 

வேலூர்க் கலகம் என்று குறிப்பிடப்படும் இன்றைய நிகழ்ச்சியில் இந்தியச் சிப்பாய்களால் பல  ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஜூலை 8, 1809

அமெரிக்க விடுதலைக்காக போராடிய வரும் காமன் சென்ஸ் என்னும் துண்டு பிரசாதத்தின் மூலம் மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியவருமான தாமஸ் பெயின் இன்று நியூயார்க்கில் காலமானார்.

ஜூலை 8, 1822

Ode to the west wind, Ode to the Skylark ஒன்று புகழ்பெற்ற கவிதைகளை எழுதிய ஆங்கில கவிஞர் ஷெல்லி தன் 30 ஆவது வயதில் கடலில் மூழ்கி இன்று காலமானார்.

ஜூலை 8, 1889

அமெரிக்கச் செய்தித் தாள் The Wall Street Journal இன்று வெளியீட்டைத் தொடங்கியது.

ஜூலை 8, 1898

சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் இருந்த குமாரசுவாமி ராஜா பிறந்த தினம். 

ஜூலை 8,1914

நீண்ட காலம் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரிய ஜோதி பாசு பிறந்த நாள்.  1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தவர் இவர். 

ஜூலை 8,1918

இந்திய அரசியலமைப்பில் மாற்றம் செய்வது குறித்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை இன்று வெளியானது.

ஜூலை 8,1919

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த நாள். 

 ஜூலை 8,1939

மதுரை மீனாட்சியம்மன்   கோயிலில் அரிசன மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 


ஜூலை 8,1962

உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ஜூலை 8,1980

மயிலை சீனி வேங்கடசாமி மறைந்த நாள்.

தமிழ் மொழியில் மறைந்து கிடந்த செய்திகளைத் தேடிக் கொணர்ந்தவர் மயிலை.சீனி வேங்கடசாமி.

 ஒருமுறை     'யாப்பருங்கலவிருத்திஎன்னும் ஒரு  நூலைப் படித்தார். 

இந்த நூலின் உரையாசிரியர்தமது உரை விளக்கத்தில், சில நூல்களை மேற்கோள்களாகக்  கூறியிருந்தார் அந்த நூல்கள்  தற்போது  இருப்பதாகத் தெரியவில்லை

இத்தகைய நூல்களின் பெயர்களைமட்டுமாவது தொகுத்து வெளியிட வேண்டும் என நினைத்துஅதனைச்  செயல்படுத்தினார்மறைந்து போன தமிழ் நூல்கள்  என்ற ஓர் அரிய நூலைப் படைத்தார். 

களப்பிரர் காலத் தமிழகம் என்னும் ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்றோர் நூலை  வெளியிட்டு,  முதன்முதலில் அழகுக்கலைகள் பற்றித் தமிழில்  எழுதிய பெருமை பெற்றார்.

கொங்கு நாட்டு வரலாறு

துளுவ நாட்டு வரலாறு

சேரன்  செங்குட்டுவன்

மகேந்திர வர்மன்

நரசிம்ம வர்மன்

மூன்றாம்  நந்தி வர்மன் 

ஆகிய நூல்கள் இவர் வழங்கியுள்ள வரலாற்றுப் படைப்புகள்


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...