Skip to main content

இதுவும் சிரிப்பு தான்

சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே வரும். சில  நேரங்களில்  செயற்கையாகவும் இருக்கும்.

குழந்தைத்தனம் முதல் வில்லத்தனம் வரை, ஆணவம் முதல் இயலாமை வரை எதை வேண்டுமானாலும் ஒரு சிரிப்புக்குள் ஒளித்து வைத்துவிட முடியும்.

உதடுகள் ஒட்டி இருக்கும் போதே உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புவதை மென்மையாகக் காட்டும் சிரிப்பு ஒரு வகை அழகு. 

முன்பல் முழுதாகத் தெரியாமல் சற்றே உதடு விரித்துச் சிரிப்பது ஒரு வகை அழகு.

இந்தச் சிரிப்புகளுக்குள் ஒட்டிக்கொண்டு "இதுவும் சிரிப்பு தான்" என்று அசடு வழிய வரும் ஒன்றை, பேச்சு வழக்கில் 'இளிப்பு' என்று சொல்லுவார்கள்.

உதடுகளின் நுனிகள் கடைவாய்ப் பற்களை நோக்கி நகரும்போதே லேசாக விரிய ஆரம்பித்து முழுப் பல்வரிசையும் தெரிய சிரிப்பது இளிப்பது என்ற வரையறைக்குள் அடங்கும்.

சிரிப்பது போல இளிப்பதை ஆங்கிலத்தில் grin like a Cheshire cat என்று சொல்லுவார்கள். அது என்ன Cheshire cat. 

அது இளிப்பதைப் போல சிரிக்கிற ஒரு பூனை. உண்மையில் அப்படி ஒரு பூனை இல்லை. அது ஒரு கற்பனையான பூனை. 

Lewis Carroll எழுதிய Alice's Adventures in Wonderland கதையில் இந்தப் பூனை ஒரு Character. 

குழந்தைகளுக்குத் தோன்றும் குதர்க்கமான கற்பனைகள் எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள இந்தக் கதையை படிக்கலாம். குழந்தைகளுக்கான கதை என்றாலும் நாமும் ரசிக்கலாம்.

அந்தக் கதையில் தான் grin like a Cheshire cat என்ற வாசகம் வருகிறது. செஷையர் பூனை போல சிரிக்கிறான் என்பது தான் அதன் தமிழ் வடிவம். (ஷேசையர் பூனை என்று படிக்கக் கூடாது)


அந்தப் பூனையின் வித்தியாசமான சிரிப்பு எல்லோருடைய மனதையும் கவர்ந்ததால் இளிப்பதைக் குறிப்பிட இன்றும் ஆங்கிலத்தில் இந்த வாசகம்  அப்படியே பயன்படுத்தப்படுகிறது.

சில படங்களில் வடிவேலு சிரிப்பதெல்லாம் இந்த Cheshire cat வகைச் சிரிப்பு தான்.




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...