Skip to main content

ஜூலை 25


ஜூலை 25,1908 

திருமண விருந்துகள்,  ஹோட்டல்களில் பரிமாறப்படும்  பிரியாணி போன்ற அசைவ வகைகள்,  சைனீஸ் துரித உணவு வகைகள்  இங்கெல்லாம் சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ  டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. 

உண்மையில் அஜினமோட்டோ என்பது இதன் பெயர் அல்ல. இதைக் கண்டுபிடித்த நிறுவனத்தின் பெயர். இதன் பெயர்  “மோனோ சோடியம் குளுட்டமேட்”.  

இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வேதிப்பொருள் உணவில் பயன்படுத்தப்படுகிறது. 

ஜூலை 25,1908 

பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் இன்று பிறந்தார். 

ஜூலை 25,1925 

சோவியத் யூனியனின் செய்தி நிறுவனம் "டாஸ்" இன்று தான் நிறுவப்பட்டது.

ஜூலை 25,1978

உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான    லூயிஸ்  ஜாய்  பிரவுன்  இங்கிலாந்தில் பிறந்தது. 

ஜூலை 25,1987

ஆர் வெங்கட்ராமன் இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜூலை 25,1992

சங்கர் தயாள் சர்மா இன்று இந்தியாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜூலை 25, 2001 

சாம்பல் பள்ளத்தாக்கில் பிரபலமான கொள்ளைக்காரியாக இருந்து பிறகு அரசியல்வாதியாக சில நாள் இருந்த பூலான் தேவி இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.  "பாண்டிட் குயின்"  என்ற பெயரில்  பூலான்தேவியின் வாழ்க்கையைச் சொல்லும் சினிமா உலக அளவில் பேசப்பட்ட படமாக விளங்கியது. 



ஜூலை 25, 2007 

பிரதீபா பாட்டில் இந்தியாவின் 12-ஆவது குடியரசுத்தலைவரானார்.  இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். அப்துல்கலாம் தொடர்ந்து இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக இருக்க வேண்டும் என்ற நாட்டுமக்களின் விருப்பத்துக்கு மாறாக இவர் தேர்வு செய்யப்பட்டார். 

ஜூலை 25, 2021 

தமிழறிஞர்  இரா. இளங்குமரனார் மறைந்த தினம். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...