Skip to main content

ஆணா? பெண்ணா?


மன உறுதியில் பெண்கள் மென்மையானவர்கள் என்றும் ஆண்கள் எந்தப் பிரச்சினையையும் சமாளித்து மீண்டு வரும் திண்மை உடையவர்கள் என்றும் காலம்காலமாக நம்பப்படுகிறது.


முதலில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் யாருக்கு எந்த நேரத்தில் என்ன தேவை? எது பிடிக்கும் எது பிடிக்காது? என்பதில் பெண்களின் உளவியல் வெற்றிக்கு முன் ஆண்களின் புரிதல் என்பது தேராத கேஸ் தான்.


ஒரு பிரச்சினையை பல கோணங்களில் அணுகும் தன்மை பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்கு இல்லை. இந்தப் பிரச்சினைக்கு என்ன என்ன வகையில் தீர்வு காணலாம் என்று ஆண்களைக் கேட்டால் ஒன்று அல்லது இரண்டு தீர்வைக் கூறி விட்டு அதில் தான் சரி என நினைப்பதை மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வலியுறுத்தும் முயற்சி தான் இருக்கும். ஆனால் பெண்களிடம் இந்த வலியுறுத்தும் தன்மை மென்மையாக இருப்பதால் ஆண் சொல்லும் தீர்வு சரியானதாக இல்லாத போதும் ஆண்களின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து தரும் ஒரு தலைமைப் பண்பு இருக்குமாம்.


கார்ல் ஜங் என்ற உளவியலாளர் பெண்ணிடம் உள்ள தன்னிலை மறந்த ஆண்மையை அனிமஸ்(animus) என்றும் ஆணிடம் இருக்கும் தன்னிலைமறந்த பெண்மையை அனிமா(anima) என்றும் வரையறுக்கிறார். ஆணிடம் தோன்றும் அனிமா ஒரு நோக்கில் மட்டும் அமைய பெண்ணிடம் உள்ள அனிமஸ் கலப்புக் குணாதிசயங்களையும் திண்மையையும் கொண்டதாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்துகிறார்.


வெறுமனே வேலைக்குப் போய் மாதா மாதம் குடும்பச் செலவை ஆண் தானே சமாளிக்கிறான்? அப்படித் தானே நினைக்கிறோம்.

வீட்டுக்குள் பெண்கள் செய்யும் வேலை என்பதோடு ஒப்பிட வேலைக்குப் போவதெல்லாம் ஒன்றுமே இல்லையாம்.

யோசிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. 

Carl jung- theory ஒரு புதிய பார்வையைத் தருகிறது. 

அது சரி போலவும் இருக்கிறது.



 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...