Skip to main content

ஜூன் 30

 ஜூன் 30, 1861 

இங்கிலாந்தின் புகழ் பெற்ற பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங் காச நோயால் காலமானார்.

 ஜூன் 30, 1908 

இன்று தான் முதல்முதலாக மைக்(Microphone), ஸ்பீக்கர் (Loud speaker), ஆம்பிளிபையர் (Amplifier)  இவற்றைப் பயன்படுத்தி AT&T நிறுவனம் அமெரிக்காவில்  மேடிசன் சதுக்கப் பூங்காவில் ஒலிபெருக்கி வாயிலாக ஒரு கூட்டத்தை நடத்தி வியக்க வைத்தது. 

இப்போதெல்லாம் சிறிய கூட்டத்தில் பேசக்கூட நாம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகிறோம். 

 ஜூன் 30, 1917 

தாதாபாய் நௌரோஜி  மறைந்த நாள். 

தாதாபாய் நௌரோஜி,  ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸை 1885  ஆம் ஆண்டு உருவாக்கியவர். 

மக்களோடு ஒட்டாமல் இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்  பால கங்காதர திலகர். திலகர் தன்னுடைய வழிகாட்டி , தாதாபாய் நௌரோஜி தான் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 30, 1945 

தஞ்சைப் பெருவுடையான், பேரிசை,  இசையியல் முதலான நூல்களை எழுதிய சங்கீத கலாநிதி தஞ்சை க.பொன்னையா பிள்ளை காலமானார்.

ஜூன் 30, 1948 

புராணக் கதைகளுக்கு புது வடிவம் தந்து, புதிய விளக்கம் தந்த  புதுமைப்பித்தன் காலமானார். அவரது இயற்பெயர் விருத்தாச்சலம். அவர் இறக்கும்போது வயது 42.

ஜூன் 30, 1975 

தொழிலாளியாகப் பணியாற்றி பின்னர் புகழ்பெற்ற எழுத்தாளராக உயர்ந்த சிறுகதைச் சிற்பி விந்தன் காலமானார்.

ஜூன் 30, 1977 

எம்.ஜி.ராமச்சந்திரன்  தலைமையிலான  அண்ணா திமுக அமைச்சரவை பதவியேற்றது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...