Skip to main content

ஜூன் 28

ஜூன் 28 1856 

மதராஸ் ரயில்வே அன்றைய கவர்னர் ஹாரிசால் துவக்கி வைக்கப்பட்டது. ராயபுரத்தில் முதல் பிளாட்பாரத்தையும் அவர்  திறந்து வைத்தார். 




ஜூன் 28,1921

முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம். 

தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமைக்கும் உரியவர் இவர். 
இவர் கொண்டிருந்த உறுதி தான் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் காரணம். 

பத்து மொழிகளுக்கு மேல் சரளமாகப் பேசவும் பிழையில்லாமல் எழுதவும் முடிந்த ஒரே பிரதமர் இன்றளவும் இவர் மட்டுமே. 
அதிகம் பேசாமல் தன்னுடைய பணியில் மட்டுமே கவனம் கொண்டிருந்த அசாத்தியமான ஆளுமை இவர். 

ஜூன் 28, 1951 

நேரு பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார்.

ஜூன் 28, 1965

Early Bird என்ற நிறுவனம் முதன்முதலாக வர்த்தக ரீதியிலான தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் இந்த ஒளிபரப்புக்கு மூலமாக விளங்கியது.

ஜூன் 28, 1972

இந்திய அறிவியல் அறிஞர் பிரசண்ட சந்திரா (Prasanta Chandra Mahalanobis) கல்கத்தாவில் இன்று மறைந்தார். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...