Skip to main content

விதி என்று இருந்தால்...

மகாபாரதப்போர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்தது. பதின்மூன்றாம் நாள் போரில் அபிமன்யு சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். அபிமன்யுவை யாராவது எழுப்ப மாட்டார்களா என ஏங்குவதாக வில்லிபுத்தூரார் பின்வரும் பாடலைப் பாடுகிறார்.


அபிமன்யுவின் மாமன் உலகத்தையே காக்கும் தெய்வமான கண்ணபிரான். அபிமன்யுவின் தந்தை யாராலும் வெல்ல முடியாத அர்ஜுனன். அபிமன்யுவின் பாட்டனார் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். அபிமன்யுவின் நண்பர்களாக உறவாக ஒரு கோடி அரசர்கள் இங்கு இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? அபிமன்யு இப்படித் தரையில் விழுந்து கிடக்கிறானே என்றெல்லாம் உள்ளம் கலங்குகிறார்.  இறுதியில் மனம் தெளிவடைந்து இந்த உலகத்தில் இப்படித்தான் நடக்கும் என விதிக்கப்பட்டிருந்தால் இந்த விதியை யாரால் வெல்ல முடியும் என ஒருவாறு அமைதியடைகிறார்.  அந்தப் பாடல்

மாயனாம் திருமாமன் தனஞ்செயனாம் 
திருத்தாதை வானோர்க் கெல்லாம்
நாயனாம் பிதாமகன் மற்றொரு கோடி 
நராதிபராம் நண்பாய் வந்தோர்
சேயனாம் அபிமனுவாம் செயத்திரதன் 
கைப்படுவான் செயற்கை வெவ்வேறு 
ஆயநாள் அவனிதலத்து அவ்விதியை 
வெல்லும் விரகார் வல்லாரே' .

கடவுளே தாய் மாமனாக இருந்தாலும் இந்திரனே தாத்தாவானாலும் அர்ஜுனனே அப்பாவானாலும் இந்த நேரத்தில் இது நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அதை யார் மாற்ற முடியும்.  இதை அனுபவத்தில் நம் பெரியவர்கள் 'வாரது வந்தா வழியிலேயும் தங்காது' என சர்வசாதாரணமாகச் சொல்வார்கள். 

மனிதனின் துயரம் அனைத்திற்கும் மனம்தான் காரணம். இதைத்தான்,

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் கட்டி வைத்தவன் யாரடா?- அவை 
எட்டுக் குஞ்சுகள் பெத்தெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா?
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.

என,  துன்பம் என்பது நிகழ்ச்சிகள் அல்ல; அதை எடுத்துக்கொள்ளும் மனசு தான் என்று கண்ணதாசன் சொல்லுவார்.  

அது உண்மைதான். அதனால் தான் நம்மில் சிலர் சிறிய விஷயத்திற்கே பெரிய கவலையில் மூழ்கி விடுவர். சிலரையோ எந்தத் துன்பமும் எதுவும் செய்வதில்லை.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...