Skip to main content

ஜூன் 10

 ஜூன் 10, 1858 

பிரௌனியன் இயக்கத்தை கண்டுபிடித்த பிரிட்டிஷ் தாவரவியல் விஞ்ஞானி ராபர்ட் பிரவுன் லண்டனில் காலமானார்.

 ஜூன் 10, 1912

கர்நாடக சங்கீத உலகில் கோலாச்சியவர்களுள் முக்கியமானவரான 

பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் பிறந்த நாள். 

மிருதங்க வித்வானான இவர் செம்பை வைத்தியநாத பாகவதர்,

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், டி. கே. பட்டம்மாள், மதுரை மணி ஐயர், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்துப் புகழ்பெற்றவர். 

 ஜூன் 10, 1935

அனைத்திந்திய வானொலியின் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளரான  சரோஜ் நாராயணசுவாமி பிறந்த தினம். 

ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற வசீகரமான குரல் நினைவிருக்கும். செய்தி என்றாலே இந்தக் குரல் தான் என்று எல்லோர் மனதிலும் பதிய வைத்த  சரோஜ் நாராயணசாமி  ஆகஸ்ட் 13,2022  அன்று மறைந்தார். 

 ஜூன் 10, 1952 

கிரேசி மோகன் மறைந்த நாள். 

கிரேசி மோகன் ஒரு தொழில் முறை என்ஜினீயர் . இருந்த போதும் மேடை நாடகங்களில் புகழ் பெற்றவர். இவரது  எல்லா நாடகங்களிலும் இவரது சகோதரர் மாது பாலாஜி இருப்பர். 

கமல்ஹாசன் இவரை தன்னுடைய படங்களுக்கு கதை வசனம் எழுதச் சொன்னதன் மூலம் திரைப்பட வசனகர்த்தா ஆனார். அபூர்வ சகோதரர்கள் , மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் கதை-வசனம் எழுதியுள்ளார்.  அப்படங்கள் வெற்றி பெற இவரது  நகைச்சுவை வசங்கள் முக்கியக் காரணம்.

 ஜூன் 10, 1972

கூகுள்  நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்  சுந்தர் பிச்சை பிறந்த நாள். 

மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து,  ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் (Metallurgical engineering)     பயின்றவர். அதன் பின்  Materials Science and  Engineering  பாடப் பிரிவில் M.S பயின்று பின்னர் MBA  படிப்பை முடித்தவர். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...