Skip to main content

குட்டி கையில் முட்டை போல சிக்கிச் சீரழிகிறது என் மனது.

 

குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அந்தப் பூவெல்லாம் பாவம் என்ன பாடுபடுமோ! குரங்கு கையில் பூமாலையே அந்தப் பாடுபடும் போது குரங்குக் குட்டி கையில் முட்டை கிடைத்தால் ...


இந்தக் காதல் என்ற குரங்குக்குட்டியிடம் என் மனம் முட்டை போல மாட்டிக்கொண்டது.


காதல் வயப்பட்டுவிட்டால் பிரிவில் எங்கிருந்து வருமோ கண்ணீர்! அப்படித் தான் அவள் கண்களிலும் கண்ணீர்த் துளிகள்.


அழும் கண்களைப் பார்த்து ஆறுதல் கூறும் தன் தோழிக்கு அந்தப் பெண் கூறுகிறாள்.


காட்டு மயில் இருக்கிறதே, அது பாறை மேல் இட்ட முட்டையை எடுத்து, முசுக் குரங்கின் குட்டி வெயிலில் வைத்து உருட்டி விளையாடும். அப்படிப்பட்ட ஊர் அவன் ஊர்.  


அவன் மேல் கொண்டுள்ள பிரியம் ரொம்ப நல்லது.

யாருக்கு நல்லது?


அவன் வேலை விஷயமாகப் பிரிந்து வெளியூர் போகும் போது யார் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியுமோ அவர்களுக்கு நல்லது.

அவன் வெளியூர் போக வேண்டி வந்தால் பிரிந்திருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணில் நீர் வழிய காத்திருக்கும் நமக்கெல்லாம் அது நல்லதில்லை.


கான மஞ்ஞை அறை ஈன் முட்டை

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி! உண்கண்

நீரொடு ஓராங்குத் தணப்ப,

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.


(கபிலர் - குறுந்தொகை)






Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...