Skip to main content

ஜூலை 1

ஜூலை 1, 1646 

கணிதம் மற்றும் இயற்பியல் கண்டுபிடிப்புகளில் பெயர் பெற்ற லீபினிட்ஸ் ஜெர்மனியில் இன்று தான் பிறந்தார். வகை நுண்கணிதம் மற்றும் தொகை நுண்கணிதம் குறித்த இவர் கண்டுபிடிப்புகள் தான் இன்றைய பல அறிவியல் துறைகளின் அடிப்படியாக விளங்குகின்றன. 

ஜூலை 1, 1881

முதன் முதலாக தொலைபேசியில் பன்னாட்டு அழைப்பு வெற்றிகரமாக பேசப்பட்டது. 

ஜூலை 1, 1843

சூப்பர் பாஸ்பேட் என்னும் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்தது. ஜான் பென்னட் லாஸ் என்பவரால் லண்டனில் இது முதன்முதலாக தயாரிக்கப்பட்டது.

ஜூலை 1, 1856

தென்னிந்தியாவின் முதல் ரயில் வியாசர்பாடிக்கும் வாலாஜா ரோட்டிக்கும் இடையே இன்று ஓடியது

ஜூலை 1, 1856

இந்தியாவில் முதன்முதலாக அஞ்சல் அட்டை (போஸ்ட் கார்டு) வெளியிடப்பட்டது. இதன் விலை  காலணா. அதாவது மூன்று தம்பிடிகள் ( ஒன்றரை பைசா).

ஜூலை 1, 1891

தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையை இன்று நிறுவினார்

ஜூலை 1, 1906

இராவண காவியம் உள்ளிட்ட நூல்களை எழுதிய புலவர் குழந்தை இன்று பிறந்தார்.

ஜூலை 1, 1929

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான  ஏ. எம். ராஜா பிறந்த நாள். 

1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். 

இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி. 

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே...

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...

ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்....

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 

யாவருக்கும் பொது செல்வமன்றோ 

ஏனோ ராதா இந்த பொறாமை 

யார்தான் அழகால் மயங்காதவரோ ...

மாசிலா உண்மைக் காதலே…

மாறுமோ செல்வம் வந்த போதிலே…

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே...

போன்ற இவர் பாடிய பல பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. 

ஜூலை 1, 1955

இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டுடைமையாக்கப்பட்டு இன்று அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்று மாற்றப்பட்டது

ஜூலை 1, 1961 

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இன்று தனது சார்பியல் கோட்பாட்டை (Special theory of relativity) வெளியிட்டார்.

 ஜூலை 1, 1964

Industrial Development Bank of India  நிறுவப்பட்டது.

ஜூலை 1, 1979

சோனி நிறுவனத்தால்  வாக்மேன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜூலை 1, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்த நாள். சுமார் ஏழு மாத காலம் பிரதமராக இருந்தார் இவர். 

ஜூலை 1, 2017

சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வந்தது. இது பொருளாதாரத்தில் ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது. 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...