Skip to main content

ஜூன் 21

  ஜூன் 21,1808

இன்று Boron (போரான்) தனிமம்  கண்டுபிடிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது. கே.லூசாக்கும் தெனாட் என்பவரும் இதை அறிவித்தனர்.  

இதே தனிமத்தை டேவி என்பவர் தானும் கண்டுபிடித்ததாக ஜூன் 30ம் தேதி அறிவித்தார். 

10 நாட்கள் இடைவெளிக்குள் பல வேதியியல் விஞ்ஞானிகள் தனித்தனியே இத் தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது வேதியியல் தனிம வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

ஜூன் 21, 1852 

கிண்டர் கார்டன் கல்வி முறையை நிறுவிய பிரெஞ்ச் கல்வியாளர் பிரெடரிக் வில்ஹெல்ம்  ஆகஸ்ட் ப்ரோபெல் ஜெர்மனியில் காலமானார்.

ஜூன் 21, 1857 

ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கோபால்ட் ப்ளூ ஆகியவற்றைக் கண்டுபிடித்தவரும்  போரான் தனிமத்தை கண்டுபிடித்தவர்களுள் ஒருவருமான  லூயிஸ் ஜாகொஸ் தெனார்ட் காலமானார்.

ஜூன் 21, 1940 

ஆர். எஸ். எஸ். அதாவது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நிறுவனர் 

கேசவ பலிராம் ஹெட்கேவர் மறைந்த தினம்.  

ஜூன் 21, 1948 

இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் பதவி விலகினார்.

ஜூன் 21, 1948 

இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பதவியேற்றார்.

1917 ஆம் ஆண்டு சேலம் நகர சபைத் தலைவராக ஆரம்பித்த அவரது நிர்வாகப் பணியின் உச்சகட்டமாக இதைச் சொல்லலாம்.

ஜூன் 21, 1980 

சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலை காலமானார். 

இவரது தலைக்கு பிரிட்டீஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்திருந்தது.

ஜூன் 21, 1991 

நேற்று காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நரசிம்மராவ் இன்று பிரதமராக பதவியேற்றார்.

ஜூன் 21, 1994 

ஆகாய கங்கை (Milky way Galaxy) சுருள் வடிவான அமைப்பில் தான் உள்ளது என்பதை முதன்முதலில் விளக்கிக்காட்டிய அமெரிக்க வானியலாளர் வில்சன் மார்க்கோன் இன்று காலமானார்.

ஜூன் 21, 2001 

இசை­ய­மைப்­பாளர் கே. வி. மகாதேவன் மறைந்த நாள்  நாள். 

சிவா­ஜியின் வசந்­த­மா­ளிகை,     

தில்­லானா மோக­னாம்பாள்,  

எம்.­ஜி. ­ஆரின் அடி­மைப்பெண், 

நல்­ல­நேரம்   மற்றும் திரை இசையில் வேறொரு பரி­மா­ணத்தைக் காட்­டிய சங்­க­ரா­ப­ரணம் போன்ற  பல படங்­களின் இசை­ய­மைப்­பாளர் இவர்.

காலத்தால் அழி­யாத எஸ்.­பி.­பி.யின் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எம்­.ஜி­.ஆ­ருக்­காக அடி­மைப்­பெண்ணில் உரு­வாக்­கி­ய­வரும் இவரே.

1988 ஆம் ஆண்டு வெளி­வந்த “பாய்­ம­ரக்­கப்பல்” படத்தில் எஸ்­.பி.பி. இவரின் இசையில் பாடிய "ஈரத் தாமரைப் பூவே.." ஒரு அருமையான மெலடி. 

கே. வி. மகாதேவன் பாடல்களை இன்று கேட்டாலும்  கர்நாடக சங்கீதத்தை இத்தனை எளிமைப்படுத்த முடியுமா என்று  வியப்பாக இருக்கும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தமிழில் மட்டும்   218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 வரை திரையுலகில், இசையுலகில் புகழோடு விளங்கினார்.   

ஜூன் 21 : International Yoga Day



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...