Skip to main content

ஜூன் 16

ஜூன் 16,1893 - 

மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் நிறுவனர் கருமுத்து தியாகராச செட்டியார் பிறந்த நாள். 

தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் சான்றோர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்தவர். ப‌ண்டித‌ ம‌ணி, பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ பெருமக்களால் தொடங்கப்பட்ட நூல் நிலையங்கள் நடத்தமுடியாத நிலைக்குச் சென்ற பொது அவற்றை விலைகொடுத்து வாங்கி தொடர்ந்து நடத்தி வந்தவர்.

ஜூன் 16,1911 

ஐ.பி.எம் நிறுவனம் இன்று தான்  நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.



16 சூன் 1924 - 

பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான  டி. ஆர். மகாலிங்கம் பிறந்த நாள். 

ஜூன் 16, 1925 

இந்திய விடுதலை இயக்க வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் டார்ஜிலிங்கில் இன்று காலமானார்.

 ஜூன் 16, 1938 

சென்னை வானொலி நிலையத்தை ராஜாஜி இன்று துவக்கி வைத்தார்.

 ஜூன் 16, 1963 

வாலன்டைனா தெரஸ்கோவா என்னும் 26 வயது பெண்ணை மாலுமியாகக் கொண்ட வோஸ்டக்- 6 என்னும் விண்வெளி ஊர்தி  ரஷ்யாவினால் செலுத்தப்பட்டது. 

விண்வெளிக்குச் சென்ற முதல் வீராங்கனையான இவர் 71 மணி நேரம் விண்ணிலிருந்து,  பூமியை 48 முறை சுற்றி வந்தார்.

 ஜூன் 16, 1971 

BBC-பி.பி.சி யை உருவாக்கிய ஜான் சார்லஸ் ரீட் எடின்பர்கில் காலமானார். 

ஜூன் 16, 1993 

இந்தியாவின் முதல் தலைமைத் தளபதி பீல்டு மார்ஷல் சி.எம்.கரியப்பா பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 93.

 ஜூன் 16, 2010

பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...