Skip to main content

ஜூன் 2

 ஜூன் 2, 1767

கார்ட்டூன் படம் என்னும் கேலிச்சித்திரம் முதன் முதலாக லண்டனிலிருந்து வெளியாகும் பொலிட்டிக்கல் ரிஜிஸ்டர் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்தது.

 ஜூன் 2, 1841 

உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க சூடுபடுத்தி, பதப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடித்த பிரஞ்ச் விஞ்ஞானி நிக்கோலஸ் அப்பர்ட் இன்று காலமானார்.

 ஜூன் 2,1943

இசைஞானி இளையராஜா  பிறந்த நாள். 

 ஜூன் 2,1964 

பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்னும் அமைப்பு இன்று துவக்கப்பட்டது.

 ஜூன் 2, 1964 

நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்படும்  சூழ்நிலை உருவானது. இதைத் தவிர்க்க காங்கிரஸ் தலைவர் காமராஜர் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஒவ்வொருவருடைய கருத்தையும் தனித்தனியே கேட்டறிந்து லால் பகதூர் சாஸ்திரி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

 ஜூன் 2,1988

ரஷ்யர்களின் உள்ளம் கவர்ந்த பிரபல இந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் காலமானார்.

 ஜூன் 2, 2017

கவிக்கோ  அப்துல் ரகுமான் மறைந்த நாள். 

இவர் ஒரு தமிழ்ப்பேராசிரியரும் கூட. ஆவார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...