Skip to main content

ஜூன் 27

  ஜூன் 27, 1774 

மாங்கனிஸ் என்னும் உலோகம் அதன் தாதுவில் இருந்து சி.ஜலி என்பவரால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது

ஜூன் 27, 1887 

சிங்கைநேசன் என்னும் தமிழ் வார இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

ஜூன் 27, 1880 

இதே நாளில் தான் அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் ஹெலன் கெல்லர் பிறந்தார்.



எல்லாக் குழந்தைகளையும்போல இயல்பாக வளர்ந்துகொண்டிருந்த ஹெலன் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பிறகு  பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார்.  இருந்தாலும் மனம் தளராமல்  பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன். 

ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர்.  பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை  அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன்.

சல்லிவனின் அன்பும் அக்கறையும்  ஹெலனுக்கு தொடர்ந்து  48 ஆண்டுகளுக்குக் கிடைத்தது. 

ப்ரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் ஹெலன். 

ஹெலனின் வாழ்வில் மிக முக்கியமானது அவர் ரேட் கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுதான். கடும் போராட்டங்களுக்குப் பிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்குதான் அவர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பார்வை, கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற ஒருவர் இளங்கலை முடித்தது அதுவே முதன்முறை. தனது 24 வயதில் முதுகலைப் பட்டமும் பெற்று வியப்பிலாழ்த்தினார்.

படிக்கும்போதே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் (the story of my life) எனத் தன் சுயசரிதையை எழுதினார். அந்தப் புத்தகம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

தனது குறைகளைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் உலகை வலம் வந்த ஹெலனை பக்கவாதம் வீட்டிலேயே முடக்கியது. 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். 

ஜூன் 27, 1902

இந்தியாவில் காந்தியடிகளைப் பற்றி முதன்முதலாக சுதேசமித்திரன் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஜூன் 27, 1922 

எழுத்தாளர்  அகிலன் பிறந்த நாள். 

இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப்பெற்ற எழுத்தாளர் அகிலன் 27-6-1922-ம் ஆண்டு கரூரில்  பிறந்தார்.

இவர் எழுதிய சித்திரப்பாவைக்கு அகில இந்திய ரீதியில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஞானபீடம் விருது  கிடைத்தது. 

சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் இவருடைய நாவலான  வேங்கையின் மைந்தன் நாவல் சாகித்ய அகாடமி பரிசைப்பெற்றது. அந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு அந்தக் காலத்தில் பெரும் புகழ்பெற்றது.  

இவர் எழுதிய கயல்விழி  “கயல்விழி” சரித்திர நாவல் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆர் விருப்பத்தின் காரணமாக  சினிமாவாக எடுக்கப்பட்டது.   ப.நீலகண்டன்  திரைக்கதை, வசனம் எழுத, அந்தப்படத்தை  எம்.ஜி.ஆர்.  இயக்குநராகவும் கதாநாயனாகவும் பங்கு பெற்று

வெளி வந்து பெரிய வெற்றிப்படமாக புகழ்பெற்றது. அந்தப் படம் தான்   “மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்”.

ஜூன் 27, 1954

உலகின் முதல் அணு மின்னுலை  ரஷ்யாவில் அமைக்கப்பட்டது. அது 5000kw மின் உற்பத்தித் திறனுடையதாக இருந்தது. 

ஜூன் 27, 1974 

இன்று  பிரதமர் இந்திராகாந்தி  தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக்  கொடுத்தது.

ஜூன் 27,  2008 
பீல்டு மார்ஷல் மானெக்சா மறைந்த தினம். 

பாகிஸ்தானுடனான போரின் போது இவரது தலைமையில் தான் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியாவிடம் சரணடைய வைத்தது. 
வங்கதேசம் எனும் தனிநாடு உருவாக முக்கியமான  காரணமாக இருந்தவர் இவர். 
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை  இதுவரை இரண்டு பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இவர் தான் முதன் முதலில் பீல்டு மார்ஷல் பதவியைப்  பெற்றவர் . இவருக்கு அடுத்து அப்பதவியைப்  பெற்றவர் கரியப்பா மட்டுமே .

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...