Skip to main content

ஜூன் 22

ஜூன் 22,1527 

இத்தாலியை உருவாக்கப் பாடுபட்ட நிக்காலோ மாக்கிய வல்லி இன்று காலமானார்.

ஜூன் 22,1633

வானியல், பொறியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய அறிவியல் துறைகளில் கலிலியோ கலிலி என்ற பெயர் எப்போதும் மறக்கப்பட முடியாத ஒரு பெயர். 

இன்றைய நாள் அவர் வாழ்க்கையில் ஒரு கொடுமையான நாள். அப்படி என்ன நடந்தது?

'சூரியன் நிலையாக இருக்கிறது. பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது' என்ற அறிவியல் உண்மையை   கலிலியோ கலிலி  உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்தக் கருத்து 'பூமி நிலையாக உள்ளது, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது' என்ற மதக் கருத்துக்கு முரணாக அமைந்திருந்ததால் ரோம் கத்தோலிக்க நிர்வாகம் அவரை மதங்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என அறிவித்து விசாரணைக்கு ரோமுக்கு வர உத்தரவிட்டது.  

விசாரணையில்  கலிலியோவை மதத் துரோகம் செய்த குற்றவாளி எனக்கூறி சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் கூறிய கருத்து தவறு என்றும் சூரியன் தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பதை பொதுவெளியில் கூறவேண்டும் என்றும் சர்ச் நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.  

தொடர்ந்த   துன்புறுத்தல்களைப்  பொறுக்கமுடியாமல்  "பூமி நிலையாக உள்ளது, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது.  பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று தவறாகக் கூறிவிட்டேன்" என்று கலிலியோ இன்று (ஜூன்-22,1633) நொந்துபோய்க் கூறினார். 

அப்படியிருந்தும் அவர்  இறக்கும் வரை வீட்டுக்காவலில் வைக்க ரோம் கத்தோலிக்க நிர்வாகம் உத்தரவிட்டது.  

அதன்படி  1642ஆம் ஆண்டு இறக்கும் வரையில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே மரணமடைந்தார். 

கலிலியோ இறந்து 350 ஆண்டுகள் கழித்து, 'பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது'  என்ற கலிலியோவின் கோட்பாடு சரியானது என்று  1992 ஆம் ஆண்டு வாடிகன் நிர்வாகம் பொதுவெளியில் அறிவித்தது. 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...