Skip to main content

ஜூன் 20

 

ஜூன் 20, 1916 

பூனேவில் இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகமான திருமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சே இந்திய இந்திய மகளிர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 ஜூன் 20, 1966 

பிரபஞ்சம் தோன்றியது பற்றிய பிக் பேங் தியரி அதாவது பெரு வெடிப்புக் கொள்கையை   உருவாக்கியவர்களில் ஒருவரான பெல்ஜியத்தை சேர்ந்த George Lemaitre   ஜீயார்ஜஸ் எட்வர்ட் லேமய்ட்டேர்  காலமானார்.


முதன் முதலில் இந்தக் கொள்கையை அவர் விவரித்தபோதும் Bigbang பிக்பாங் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. 

ஜூன் 20, 1970 

இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சலீம் அலி பம்பாயில் காலமானார்.


ஜூன் 20, 1991 

ராஜீவ் காந்திக்கு பிறகு பி.வி.நரசிம்மராவ்  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இவர் நாளை (21.6.1991) பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஜூன் 20, 2003 

விக்கிமீடியா நிறுவனம் இன்று புளோரிடாவில் தொடங்கப்பட்டது.

ஜூன் 20, 2005 

மின்னியல் துறையில் சிப்(Chip) என்று தற்போது வழங்கப்படும் IC யை (Integrated Circuit)  முதன்முதலில் உருவாக்கியவரான Jack.S.Kilby அமெரிக்காவில் இன்று காலமானார். 

ஜூன் 20, 2006

சுரதா மறைந்த நாள். 

இராசகோபாலன் என்ற தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டவர் இவர். பாரதி மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினம் என்ற தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர் பாரதிதாசன்.

பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் இராசகோபாலன் என்ற தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டு அதையும் சுருக்கி சுரதா என்று ஆக்கிக் கொண்டவர் இவர்.

உவமைக் கவிஞர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் சுரதா.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...