Skip to main content

இரண்டில் எது சிறந்தது?

 


  பரபரப்பான இன்றைய உலகில் வாழ்பவர்களுக்கு எதெல்லாம் சிறப்பானவை என்று தெரிந்துகொள்ள...



படிப்பு, ஒழுக்கம் இவை இரண்டில் எது சிறந்தது? 

ஒழுக்கம் தான்.



பழிபாவங்களுக்கு அஞ்சுவது, அன்பு காட்டுவது இவை இரண்டில் எது சிறந்தது? 


பழிபாவங்களுக்கு அஞ்சுவதே சிறந்தது.



அறிவில் சிறந்த மேதையாக இருப்பது, கற்றதை மறவாமல் இருப்பது இவை இரண்டில் எது சிறந்தது? 


கற்றதை மறவாமல் இருப்பது சிறந்தது.


இல்லை என்று வந்தவர்களுக்கு உதவுவது, பொய் சொல்லாமல் இருப்பது இவை இரண்டில் எது சிறந்தது? 


வாய்மையே சிறந்தது.


இளமையா? நோய் இல்லாமல் இருப்பதா?

நோய் இல்லாமல் இருத்தல் சிறந்தது.


உடல் அழகா? கெட்ட வழியில் போகத்தெரியாமல் இருப்பதா?

கெட்ட வழியில் போக  

அஞ்சும் நாணம் சிறந்தது.



குலப்பெருமை , கற்பு நெறி இவை இரண்டில்?


கற்பு நெறியைக் கடைப்பிடித்தல் சிறந்தது.


கற்றுக்கொள்வது, கற்றவர்களின் நட்பில் இருப்பது இவற்றில்?


கற்றலை விடக் கற்றவர்கள் வழிநிற்றல் சிறந்தது.


எதிரி மீது கோபம், நம் மீது கோபம்

இரண்டில்?


எதிரி மீது கோபம் கொள்வதை விட, அவன் எதிரியாகக் காரணமான நம் மீது கோபம் கொள்ளுதல் சிறந்தது.


செல்வம் சேர்ப்பது, இருப்பது குறையாமல் பார்த்துக் கொள்வது இவை இரண்டில்?


செல்வம் சேர்ப்பதை விட செல்வம் குறையாமல் வாழ்தல் சிறந்தது.


ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்


ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை. 

காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல். 

மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை. 

வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை. 

இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை. 

நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று. 

குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று. 

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. 

செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று. 

முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று


(முதுமொழிக்காஞ்சி)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...