போருக்கு வந்த அவன் போர் முடிந்து வீட்டுக்குப் போக நினைக்கிறான்.
பெருமை மிகு மன்னன் தொடங்கிய போரும் முடிவுக்கு வந்து விட்டது.
வழியெங்கும் மழை பொழிந்து நிலமெங்கும் ஈரப்பதமாக இருக்கிறது.
நாகப் பாம்புகள் நடுங்கும்படி இடி இடிக்கிறது.
போருக்குப் போகும் படை போல மழைமேகக் கூட்டம் அணியணியாகப் போகிறது.
நானும் திரும்பவேண்டும்.
அவள் காத்திருப்பாள்.
வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.
(கார் நாற்பது 20)
Comments
Post a Comment
Your feedback