Skip to main content

உடைவது ஐஸ் தானா?



நீண்ட தூரம் ரயிலில் அல்லது பஸ்ஸில் தனியாகப் போக வேண்டி வரும் போது அருகில் இருப்பவரோடு ஒரு சிநேகம் வரும். 

பயணம் முடியும் வரை அவரோடு பேசிக்கொண்டு வரலாம். இப்போதெல்லாம் யாரும் யாரோடும் பேசுவதில்லை.

 எல்லாம் மொபைல் போனுக்குள் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருப்பவரை ஒரு மனிதராக நினைப்பதில்லை. அதுவும் ஒரு பொருள் என்ற அளவில் தான் ஓடுகிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும்.


ஆனால் சில ஆண்டுகள் முன்பு ரயில் அல்லது பஸ்ஸில் போவது என்பது சமூகத்தோடு உண்மையிலேயே கலந்து போவது தான். பயணத்தின் போது அருகில் அமர்ந்திருப்பவர்களோடு பேச்சைத் தொடங்குவது என்பது ஒரு கலை. 


வானிலை இந்த விசயத்தில் ரொம்பவும் பயன்படும். 


"இங்கயெல்லாம் நல்ல மழை போல. ஆனால் எங்க ஊருக்குத் தான் மழையே வரமாட்டேங்குது" என ஒரு தூண்டிலை வீசிவிட்டு யார் நம்மோடு பேசுவதற்கு வருவார் எனக் காத்திருக்க வேண்டும். 


"எங்க ஊருக்கும் மழை சரியில்ல. இங்க நல்ல மழை தான் போல" என்று ஒருவர் "நான் ரெடி" என வந்து பேச்சைத் தொடங்குவார்.


ரெண்டு பேரும் எந்த ஊர் என்ற விபரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க விபரங்கள் வரைக்கும்  சில நிமிடங்களில் அன்யோன்யம்  வந்துவிடும்.


மழை தான் என்றில்லை. "இந்த வருடம் என்னமோ வெயில் இப்படி அடிக்கிறது" என்பதும் நட்புத் தூண்டில் தான்.


இப்படி ஒரு பேச்சை ஆரம்பிக்கும் கலையை ஆங்கிலத்தில் 

Breaking the ice என்று சொல்லுவார்கள்.


இந்த breaking the ice வராதவர்கள் தான் "தேமே" என்று பாட்டுக் கேட்டுக்கொண்டு அல்லது ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவார்கள்.


Now a days, no chance for us to break any ice. If we try breaking the ice they will break the head.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...