Skip to main content

இப்படி ஒரு வரமா?

 கிரேக்க புராணத்தில் வரும் ஒரு கதை.


  ஈயாஸ் (Eos) ஒரு பெண் தெய்வம். விடிந்தும் விடியாத காலைப் பொழுதுக்கான கடவுள். ஈயாஸ்க்கு ஒரு சாதாரண மனிதன் மேல் காதல். அவன் பெயர் டிதொன்ஸ் (Tithonus). 

அவன் மனிதன் என்பதால் விரைவில் இறந்து விடுவான் என்பது ஈயாஸ்க்குத் தெரியும். அவனை எப்படி சாகாமல் வைத்திருப்பது என்று யோசிக்கிறாள்.  


 சியஸ்(Zeus) என்பது எல்லாக் கடவுள்களுக்கும் பெரிய கடவுள். ஈயாஸ், சியஸ்சிடம் செல்கிறாள். எல்லாவற்றையும் சொல்லி, தன் காதலன் டிதொன்ஸ் இறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற தன் கவலையைச் சொல்கிறாள். 

அவள் மேல் இரக்கம் கொண்ட சியஸ் அவள் கேட்கும் வரத்தைத் தருவதாகச் சொல்கிறார்.


அவள் உடனே டிதொன்ஸ் இறந்து விடக்கூடாது என்று கேட்கிறாள்.

அவரும் சாகா வரம் தந்து விடுகிறார்.


அவள் வாங்கி வந்தது வரம் அல்ல சாபம் என்று பிறகு தான் புரிந்தது.


ஏன், என்ன ஆச்சு?


நாட்கள் ஓடின. 100 ஆண்டுகளைக் கடந்த போது, டிதொன்ஸ் மனிதன் என்பதால் அவனுக்கு கண் பார்வை மங்கிவிட்டது. காது கேட்கும் திறன் போய்விட்டது. தோல் எல்லாம் தொங்கிப் போய்விட்டது. படுத்த படுக்கையாகவே கிடந்தான். உடல் வலி வேறு. 

 இந்தத் துன்பம் எல்லாம் இன்னும் சில காலம் தான். மரணம் வந்து விடும் என்று நினைக்க வழியில்லை. அவனுக்கு கொடுக்கப்பட்ட வரத்தால் அவன் எப்போதும் இறக்க முடியாது. 

வரம் என்ற பெயரில் வலியப் போய் வரவழைத்துக் கொண்ட நரகம் அது.


எது முன்னமே கொடுக்கப்பட்டதோ அது சரியானது. கேட்டு வாங்கும் வரம் எல்லாம் வரமல்ல. 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...