Skip to main content

Posts

Showing posts from June, 2025

அரசாள 56" மார்பளவு வேண்டுமா ?

அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் 56 இன்ச் மார்பளவைப்  பற்றிப் பேசியதைக் கவனித்திருப்போம். 56 இன்ச் மார்பளவு என்பது டெய்லர் எடுக்கும் சட்டை அளவுக்காகச் சொல்லப்படுவதல்ல.  அது வலிமையான தலைமைப் பண்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் கூறப்படும் ஒரு குறியீடு.  Metaphorical expression போல அதைச் சொல்லலாம்.  ஒரு நாட்டின் தலைவன் என்றால் ஓய்வும் உறக்கமும் இல்லாமல் சோர்வாக  இருந்தாலும் ஓயாது உழைக்க வேண்டும்.   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் நூற்றுக்கணக்கான ஆலோசனைகள் வரும்.   அதில் முடிவெடுக்கும் திறன், வருமுன் அறிதல், விளைவுகளை எதிர்கொள்ளுதல், கடினமான நேரங்களில் தன்னிலை பிறழாமல் துவண்டு போகாமல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாதுரியம் என எல்லாவற்றுக்குமான குறியீடு அது. 56 இன்ச் மார்பளவு என்பது என்னவோ உடல் அளவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொள்பவர்களும் உண்டு. கம்ப இராமாயணம் கூட இந்த மார்பளவைப் பற்றிக் கூறுகிறது. காதோரம் வெள்ளை முடி வந்தவுடன் தசரதன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று கருதுகிறான். தான் இத்தனை ஆண்டுகளாகச் சுமந்த அந்த அரச பாரத்தைத் தாங...

ஜூலை 1

ஜூலை 1, 1646   கணிதம் மற்றும் இயற்பியல் கண்டுபிடிப்புகளில் பெயர் பெற்ற லீபினிட்ஸ் ஜெர்மனியில் இன்று தான் பிறந்தார். வகை நுண்கணிதம் மற்றும் தொகை நுண்கணிதம் குறித்த இவர் கண்டுபிடிப்புகள் தான் இன்றைய பல அறிவியல் துறைகளின் அடிப்படியாக விளங்குகின்றன.   ஜூலை 1, 1881 முதன் முதலாக தொலைபேசியில் பன்னாட்டு அழைப்பு வெற்றிகரமாக பேசப்பட்டது.  ஜூலை 1, 1843 சூப்பர் பாஸ்பேட் என்னும் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்தது. ஜான் பென்னட் லாஸ் என்பவரால் லண்டனில் இது முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. ஜூலை 1, 1856 தென்னிந்தியாவின் முதல் ரயில் வியாசர்பாடிக்கும் வாலாஜா ரோட்டிக்கும் இடையே இன்று ஓடியது ஜூலை 1, 1856 இந்தியாவில் முதன்முதலாக அஞ்சல் அட்டை (போஸ்ட் கார்டு) வெளியிடப்பட்டது. இதன் விலை  காலணா. அதாவது மூன்று தம்பிடிகள் ( ஒன்றரை பைசா). ஜூலை 1, 1891 தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையை இன்று நிறுவினார் ஜூலை 1, 1906 இராவண காவியம் உள்ளிட்ட நூல்களை எழுதிய புலவர் குழந்தை இன்று பிறந்தார். ஜூலை 1, 1929 பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான ...

ஜூன் 30

  ஜூன் 30, 1861   இங்கிலாந்தின் புகழ் பெற்ற பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங் காச நோயால் காலமானார்.   ஜூன் 30, 1908   இன்று  தான்  முதல்முதலாக மைக் (Microphone),  ஸ்பீக்கர்  (Loud speaker) , ஆம்பிளிபையர்  (Amplifier)   இவற்றைப் பயன்படுத்தி AT&T  நிறுவனம் அமெரிக்காவில்  மேடிசன் சதுக்கப் பூங்காவில் ஒலிபெருக்கி வாயிலாக ஒரு கூட்டத்தை நடத்தி வியக்க வைத்தது.  இப்போதெல்லாம் சிறிய கூட்டத்தில் பேசக்கூட நாம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகிறோம்.    ஜூன் 30, 1917   தாதாபாய் நௌரோஜி  மறைந்த நாள்.  தாதாபாய் நௌரோஜி,  ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸை 1885  ஆம் ஆண்டு உருவாக்கியவர்.  மக்களோடு ஒட்டாமல் இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்  பால கங்காதர திலகர். திலகர் தன்னுடைய வழிகாட்டி , தாதாபாய் நௌரோஜி தான் என்று குறிப்பிட்டார். ஜூன் 30, 1945   தஞ்சைப் பெருவுடையான், பேரிசை,  இசையியல் முதலான நூல்களை எழுதிய சங்...

ஜூன் 29

  ஜூன் 29, 1893 இந்திய அறிவியல் அறிஞர் பிரசண்ட சந்திரா  (Prasanta Chandra Mahalanobis)  கல்கத்தாவில் இன்று பிறந்தார்.  ஜூன் 29, 1925   நாடகம் என்றாலே மறக்க முடியாத பெயர்களுள் ஒன்று ஆர். எஸ். மனோகர்  என்ற பெயர். இன்று தான் அவர் பிறந்தார். நாடக நடிகராக பெரும் புகழ் பெற்ற இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும்  நடித்துள்ளார். ஜூன் 29, 1943   "நீங்கள் உங்கள் ரத்தத்தைத் தாருங்கள். உங்களுக்கு நான் விடுதலை வாங்கித் தருகிறேன்" என்னும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  புகழ்பெற்ற சொற்பொழிவை டோக்கியோ வானொலி நிலையம் இன்று ஒலிபரப்பியது. ஜூன் 29, 1947 புகழ் பெற்ற எழுத்தாள அனுராதா ரமணன் பிறந்த நாள்.  ஜூன் 29, 1966   இந்திய விஞ்ஞானி, கணித வல்லுநர், சம்ஸ்கிருத மேதை, வரலாற்று ஆசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட தாமோதர் தர்மனண்ட் கோசாம்பி (Damodar Dharmanand Kosambi) இன்று மறைந்தார். ஜூன் 29, 2009 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான  வ. ஐ. சுப்பிரமணியம்  மறைந்த நாள்.  ஜூன் 29, 2017 பக்திப் பாடல்களின் வழியா...

ஜூன் 28

ஜூன் 28 1856   மதராஸ் ரயில்வே அன்றைய கவர்னர் ஹாரிசால் துவக்கி வைக்கப்பட்டது. ராயபுரத்தில் முதல் பிளாட்பாரத்தையும் அவர்  திறந்து வைத்தார்.  ஜூன் 28,1921 முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம்.  தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமைக்கும் உரியவர் இவர்.  இவர் கொண்டிருந்த உறுதி தான் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் காரணம்.  பத்து மொழிகளுக்கு மேல் சரளமாகப் பேசவும் பிழையில்லாமல் எழுதவும் முடிந்த ஒரே பிரதமர் இன்றளவும் இவர் மட்டுமே.  அதிகம் பேசாமல் தன்னுடைய பணியில் மட்டுமே கவனம் கொண்டிருந்த அசாத்தியமான ஆளுமை இவர்.  ஜூன் 28, 1951   நேரு பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார். ஜூன் 28, 1965 Early Bird என்ற நிறுவனம் முதன்முதலாக வர்த்தக ரீதியிலான தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் இந்த ஒளிபரப்புக்கு மூலமாக விளங்கியது. ஜூன் 28, 1972 இந்திய அறிவியல் அறிஞர் பிரசண்ட சந்திரா  (Prasanta Chandra Mahalanobis) க...

ஜூன் 27

    ஜூன் 27, 1774   மாங்கனிஸ் என்னும் உலோகம் அதன் தாதுவில் இருந்து சி.ஜலி என்பவரால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது ஜூன் 27, 1887   சிங்கைநேசன் என்னும் தமிழ் வார இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. ஜூன் 27, 1880   இதே நாளில் தான் அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் ஹெலன் கெல்லர் பிறந்தார். எல்லாக் குழந்தைகளையும்போல இயல்பாக வளர்ந்துகொண்டிருந்த ஹெலன் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பிறகு  பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார்.  இருந்தாலும் மனம் தளராமல்  பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன்.  ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர்.  பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை  அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன். சல்லிவனின் அன்பும் அக்கறையும்  ஹெலனுக்கு தொடர்ந்து...

ஜூன் 26

  ஜூன் 26, 1827 நூல்நூற்பு  இயந்திரத்தை கண்டுபிடித்த சாமுவேல் கிராம்டன் இன்று காலமானார்.   ஜூன் 26, 1906 சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம. பொ. சி.(மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ) பிறந்த நாள். சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் இன்று அவர் பிறந்தார்.  ஜூன் 26, 1943 மனிதர்களின் உடம்பில் உள்ள ரத்த வகைகளைக் கண்டுபிடித்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னர்  (Karl Landsteiner) இன்று மறைந்தார். 

ஜூன் 25

ஜூன் 25, 1975   பிரதமர் இந்திரா காந்தி இன்று நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார். இன்று குடியரசுத் தலைவர்  பக்ருதீன் அலி அகமது அந்த ஆணையை வெளியிட்டார்.  1975  ஜூன்    25  முதல்  1977  மார்ச்    21  முடிய  இருபத்தொரு மாதங்கள் இந்த நெருக்கடி நிலை அமலில் இருந்தது.   ஜூன் 25, 1984   அமிர்தசரஸ் பொற்கோயில்  பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது.   ஜூன் 25, 1990   நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள  உலகம்மை  காசி விசுவநாதர் கோவில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது.  178 அடி உயரமும் ஒன்பது நிலைகளையும் கொண்டு இந்த ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.  அன்றைய நாளில் ஒரு கோடி ரூபாய் செலவாயிற்று.   ஜூன் 25, 2025 இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குப் புறப்பட்டுச் சென்று  வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தார். ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இந்தியர் என்ற பெருமையை சுக்லா இன்று பெற்றார். 

அவள் வருவாளா ?

  பேச வேண்டும் போலத் தான் இருக்கிறது அவளிடம். இன்னும் பேசத் தான் முடியவில்லை. அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம்  என்னிடம் ஏதோ சொல்வது போலவே இருக்கிறது.  என்ன என்று தான் புரியவில்லை. அவள் வீடு எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும். பெயரை  இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் பல்லையே நான் பலமுறை பார்த்திருக்கிறேன். முல்லை மலரையும் ஆம்பல் மலரையும் சேர்த்துக் கட்டி வைத்த பூச்சரம் போல இருக்கின்றன அவள் பற்கள். இப்போது என்னைக் கடந்து போகும்போது அவள் பாட்டுக்குப் போயிருக்கலாம்.  ஆனால் அவளோ திரும்பி  என்னைப் பார்த்து விட்டுப் போய் விட்டாள். அவள் பார்த்த அந்தப் பார்வை மன்மதனிடம் என்னைக் கொன்று போடச் சொல்லியிருக்குமோ ! அவள் என்னைப் பார்த்தபோது 'இங்கேயே இரு வந்து விடுகிறேன்' என்று சொன்னது போலவே இருந்தது. அது தான் நான் இங்கேயே இந்தக் கோவில் கோபுரத்தின் அருகேயே  நின்றுகொண்டிருக்கிறேன்.  என்னை தெருவில் நிற்கச் சொல்லிவிட்டு அவள் என்  நெஞ்சுக்குள் போய் நின்றுகொண்டாள். இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம் பல்லென்று செவ்வாம்பன் ...

ஜூன் 24

ஜூன்24,1907   பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்ற கா.அப்பாத்துரை இன்று பிறந்தார்.  இன்று பிறந்த அவர்  1989 மே-26  அன்று மறைந்தார்.  ஜூன் 24, 1927 கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்.  ஜூன் 24, 1928 எம்எஸ்வி என்று புகழ்பெற்ற இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பிறந்த நாள்.  இன்று பிறந்த அவர் 14.7.2015  அன்று மறைந்தார்.  ஜூன் 24, 1963   இந்தியாவில் டெலக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூன் 24, 1980   முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரி காலமானார். ஜூன் 24, 1991   ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றது. ஜூன் 24, 1992   கர்நாடக இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் சென்னையில் கார் விபத்தில் காலமானார். அவருக்கு வயது 69.

ஜூன் 23

  ஜூன் 23, 1757   இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் நிலை பெற உதவிய பிளாசிப் போர் நடந்த நாள். வங்காள நவாப் ஆன சிரஜுத் தவ்லாவுக்கும்   ராபர்ட் கிளைவ் அட்மிரல் வாட்சன் தலைமையில் வந்த ஆங்கிலப் படைக்கும் காலை 8  மணிக்கு ஆரம்பித்த போர் மாலை 4 மணிக்குள் முடிந்தது. இதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.    ஜூன் 23,1980   டில்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி மரணம் அடைந்தார். ஜூன் 23,1995 போலியோ நோய்க்கு முதன்முதலில் பாதுகாப்பான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்க மருத்துவர் ஜோனாஸ் எட்ஸ்வர்ட் சாக் (Jonas Edward Salk) இன்று மறைந்தார். 

ஜூன் 22

ஜூன் 22,1527   இத்தாலியை உருவாக்கப் பாடுபட்ட நிக்காலோ மாக்கிய வல்லி இன்று காலமானார். ஜூன் 22,1633 வானியல், பொறியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய அறிவியல் துறைகளில் கலிலியோ கலிலி என்ற பெயர் எப்போதும் மறக்கப்பட முடியாத ஒரு பெயர்.  இன்றைய நாள் அவர் வாழ்க்கையில் ஒரு கொடுமையான நாள். அப்படி என்ன நடந்தது? 'சூரியன் நிலையாக இருக்கிறது. பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது' என்ற அறிவியல் உண்மையை   கலிலியோ கலிலி  உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்தக் கருத்து 'பூமி நிலையாக உள்ளது, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது' என்ற மதக் கருத்துக்கு முரணாக அமைந்திருந்ததால் ரோம் கத்தோலிக்க நிர்வாகம் அவரை மதங்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என அறிவித்து விசாரணைக்கு ரோமுக்கு வர உத்தரவிட்டது.   விசாரணையில்  கலிலியோவை மதத் துரோகம் செய்த குற்றவாளி எனக்கூறி சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  அவர் கூறிய கருத்து தவறு என்றும் சூரியன் தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பதை பொதுவெளியில் கூறவேண்டும் என்றும் சர்ச் நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.   தொடர...

ஜூன் 21

   ஜூன் 21,1808 இன்று Boron (போரான்) தனிமம்  கண்டுபிடிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.  கே.லூசாக்கும் தெனாட் என்பவரும் இதை அறிவித்தனர்.   இதே தனிமத்தை டேவி என்பவர் தானும் கண்டுபிடித்ததாக ஜூன் 30ம் தேதி அறிவித்தார்.  10 நாட்கள் இடைவெளிக்குள் பல வேதியியல் விஞ்ஞானிகள் தனித்தனியே இத் தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது வேதியியல் தனிம வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். ஜூன் 21, 1852   கிண்டர் கார்டன் கல்வி முறையை நிறுவிய பிரெஞ்ச் கல்வியாளர் பிரெடரிக் வில்ஹெல்ம்  ஆகஸ்ட் ப்ரோபெல் ஜெர்மனியில் காலமானார். ஜூன் 21, 1857   ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கோபால்ட் ப்ளூ ஆகியவற்றைக் கண்டுபிடித்தவரும்  போரான் தனிமத்தை கண்டுபிடித்தவர்களுள் ஒருவருமான  லூயிஸ் ஜாகொஸ் தெனார்ட் காலமானார். ஜூன் 21, 1940   ஆர். எஸ். எஸ். அதாவது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நிறுவனர்  கேசவ பலிராம் ஹெட்கேவர் மறைந்த தினம்.   ஜூன் 21, 1948   இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் பதவி விலகினார். ஜூன் 21, 1948   இன்று திங்கட்கி...

ஜூன் 20

  ஜூன் 20, 1916  பூனேவில் இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகமான திருமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சே இந்திய இந்திய மகளிர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.   ஜூன் 20, 1966  பிரபஞ்சம் தோன்றியது பற்றிய பிக் பேங் தியரி அதாவது பெரு வெடிப்புக் கொள்கையை   உருவாக்கியவர்களில் ஒருவரான பெல்ஜியத்தை சேர்ந்த George Lemaitre    ஜீயார்ஜஸ் எட்வர்ட் லேமய்ட்டேர்  காலமானார். முதன் முதலில் இந்தக் கொள்கையை அவர் விவரித்தபோதும் Bigbang பிக்பாங் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.  ஜூன் 20, 1970  இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சலீம் அலி பம்பாயில் காலமானார். ஜூன் 20, 1991   ராஜீவ் காந்திக்கு பிறகு பி.வி.நரசிம்மராவ்  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இவர் நாளை (21.6.1991) பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஜூன் 20,  2003   விக்கிமீடியா நிறுவனம் இன்று புளோரிடாவி ல் தொடங்கப்பட்டது. ஜூன் 20,  2005   மின்னியல் துறையில் சிப்( Chip ) என்று தற்போது வழங்கப்படும் IC  யை   (Integrated C...

Spendthrift and Thrifty

  Spendthrift and Thrifty A spendthrift is someone who spends money in a wasteful or extravagant way.  For example,  Gopi is a spendthrift. Whatever money he makes, he spends on buying new clothes.   A thrifty person, on the other hand is someone who saves money, does not buy things he does not need, and does not waste things.    For example,  My mother is a thrifty house keeper.

ஜூன் 19

ஜூன் 19,1623 ஃப்ரெஞ்ச் அறிவியல் அறிஞர் Blaise Pascal பிறந்த தினம்.  SI முறையில் அழுத்தத்தை (Pressure) குறிக்கும் அலகான pascal என்பது இவரைக் கௌரவிக்கும் நோக்கில் குறிப்பிடப்படும் அலகு. ஜூன் 19,1945 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் தற்போது இராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டுள்ளவருமான Aung San Suu Kyi ஆங் சான்சூஹி பிறந்த தினம். ஜூன் 19,1961 பிரிட்டனிடமிருந்து குவைத் சுதந்திரம் பெற்றது. ஜூன் 19, 1966 சிவசேனா இயக்கம் இன்று  மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 19,1970 காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பிறந்தநாள்.   ஜூன் 19,1990   சென்னை கோடம்பாக்கத்தில் தமிழ் ஈழ புரட்சி விடுதலை முன்னணி தலைவர் பத்மநாபன்  உட்பட 14 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகளால்  சுட்டுக் கொல்லப்பட்டனர். சூன் 19, 2020 எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க வாழ்க...வாழ்க... என்ற அமரத்துவம் வாய்ந்த பாடலைப் பாடிய பாடகர் நடிகர் A. L. ராகவன்  மறைந்த தினம்.  கொரோனா கொள்ளை கொண்ட ஆளுமைகளுள் இவரும் ஒருவர்.

ஜூன் 17

  ஜூன் 17,  1631  முகலாய மன்னன் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ்மஹால் பிரசவத்தின்போது இறந்தார்.  அவரின் நினைவாகத்  தான் தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார். ஜூன் 17, 1911 மணியாச்சி சந்திப்பில் முதல் வகுப்பு வண்டியில் இருந்த கலெக்டர் ஆஷை வாஞ்சிநாத ஐயர் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 17, 1917 அமெரிக்காவில் சார்லி சாப்ளின் நடித்த த இம்மி கிராண்ட் எனும் திரைப்படம் முதன்முதலாக  வெளியிடப்பட்டது. ஜூன் 17, 1967 சைவமும் செந்தமிழும் தன் கண்கள் எனக் கொண்டு வாழ்ந்து வந்த  தமிழ் வித்தகர் ஜெகவீர பாண்டியனார் காலமானார்.

ஜூன் 18

  ஜூன் 18, 1658   அவுரங்கசீப்பின் மகன் முஹம்மது சக்கரவர்த்தி ஷாஜகானுக்கு தன் தந்தையிடமிருந்து ஏதோ செய்தி  கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு சில வீரர்களுடன் ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்தான்.  நுழைந்த அவன்  தன் தாத்தாவான ஷாஜகானின் பாதுகாவலர்களைக் கொன்றுவிட்டு ஷாஜகானைச் சிறைப்பிடித்தான். ஜூன் 18, 1815   வரலாற்றுச் சிறப்புமிக்க வாட்டர் லூ போர் நடந்த நாள்.   இந்தப் போரில் நெப்போலியன் படை பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யப் படைகளினால் முறியடிக்கப்பட்டது.  நெப்போலியன் சிறைப்பிடிக்கப்பட்டு செயிண்ட் ஹெலினா தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். வரலாற்றில் மார்ச் 30ஆம் தேதி  நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இன்று  ஹெலினா தீவிற்கு நாடு கடத்தப்பட்டது  வரை உள்ள காலகட்டம் 100 நாட்கள் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. நெப்போலியனைத் தோற்கடித்த வெலிங்டன் பிரபுக்கு மன்னரால் பீட்சா எஸ்டேட் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது.  இதற்கான வாடகை ஒவ்வொரு ஆண்டும் வாட்டர்லூ தினமான இன்று அப்போதைய வெலிங்டன் பிரபுவால் மன்னருக்குக் கொடுக்கப்படும்.   இதன...

நல்ல பேச்சு நடக்குது

இத்தனை நாளாகப் பழகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் இப்படியே இருக்க முடியாது. அதனால் முறைப்படி அவள் வீட்டுக்குச் சென்றுபெண் கேட்க முடிவு செய்கிறான். இப்படி முறைப்படி பெண் கேட்பதற்காக தன் உறவினரை அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். இந்தத் திருமணத்திற்கு அவர்கள் சம்மதிப்பார்களோ சம்மதிக்க மாட்டார்களோ என்று அவளுக்கும் கவலை. அப்படியான சூழலில் பெண் கேட்டு வந்த உறவினர்கள் இதோ வந்துவிட்டார்கள். அவர்கள் பெண் கேட்டு வரவிருக்கின்ற செய்தி அந்த பெண்ணின் வீட்டாருக்கு முன்பே சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் பெண்ணின் வீட்டில் அந்தப் பெண்ணின் தாய், தந்தை மற்றும் உள்ள நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே ஒரு சபை போல இருக்கிறது. பெண் கேட்க வந்தவர்களை அவர்கள் வரவேற்கிறார்கள். பெண்கேட்டு வந்த பெரியவர்களோ "நன்மை உண்டாகட்டும், நன்மை உண்டாகட்டும்" என்று வாழ்த்திக் கொண்டே வந்தார்கள்.   பெண் வீட்டில் இருக்கிற பெரியவர்களோ அதற்கு மறுமொழியாக "இந்த நாள் எங்களுக்குச் சிறந்த நாள், பெருமை தரும் நல்ல நாள்" என்று பதிலுக்கு வாழ்த்தினார்கள். அந்தப் பெண்...

ஜூன் 15

  ஜூன் 15, 1572 மின்னல் என்பது மின்சாரம் தான் என்பதை மெய்ப்பிக்க பெஞ்சமின் பிராங்கிளின் காற்றாடிப் பரிசோதனை நடத்திய நாள் இன்று. ஜூன் 15, 1944 பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த நாள். ஜூன் 15,1948  கொடைவள்ளல் என்று பெயர் பெற்ற ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் காலமானார்.   ஜூன் 15, 2001 சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின. ஜூன் 15, 2007 உலகின் மிகவும் நீளமான (34 கி.மீ) ரயில் சுரங்கப்பாதை, சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது. ஜூன் 15, 2012 முதன் முதலாக நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது கயிற்றின் மேல் நடந்து  நிக் வெலெண்டா என்பவர்  சாதனை புரிந்தார். ஜூன் 15, 2013   நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்த நாள்.  400  படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர்  50 திரைப்படங்களின் இயக்குனரும் கூட. 

ஜூன் 16

ஜூன் 16, 1893  -  மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் நிறுவனர் கருமுத்து தியாகராச செட்டியார் பிறந்த நாள்.  தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் சான்றோர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்தவர். ப‌ண்டித‌ ம‌ணி, பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ பெருமக்களால் தொடங்கப்பட்ட நூல் நிலையங்கள் நடத்தமுடியாத நிலைக்குச் சென்ற பொது அவற்றை விலைகொடுத்து வாங்கி தொடர்ந்து நடத்தி வந்தவர். ஜூன் 16, 1911  ஐ.பி.எம் நிறுவனம் இன்று தான்  நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது. 16 சூன் 1924 -  பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான  டி. ஆர். மகாலிங்கம் பிறந்த நாள்.  ஜூன் 16, 1925  இந்திய விடுதலை இயக்க வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் டார்ஜிலிங்கில் இன்று காலமானார்.  ஜூன் 16, 1938  சென்னை வானொலி நிலையத்தை ராஜாஜி  இன்று  துவக்கி வைத்தார்.  ஜூன் 16, 1963  வாலன்டைனா தெரஸ்கோவா என்னும் 26 வயது பெண்ணை மாலுமியாகக் கொண்ட வோஸ்டக்- 6 என்னும் விண்வெளி ஊர்தி  ரஷ்யாவினால் செலுத்தப்பட்டது.  விண்வெளிக்குச் சென்ற மு...