Skip to main content

Posts

Showing posts from April, 2022

காதல் மரமே நீ வாழ்க!

  நொச்சி மரமே! காதலர்கள் அமர்ந்து பேசி மகிழ்வதற்கு வசதியாக நல்ல நிழலோடு மறைவான இடமும் தருகிறாய். அதனால் நாங்கள் உன்னைக் காதல் மரம் என்று கூறுவோம். பெண்கள் உடுத்தும் ஆடையாக நீ விளங்குகிறாய்.  அரணாக விளங்கும் எங்கள் மதிலைக் கடக்க நினைக்கும் எதிரிகளை வென்ற எங்கள் வீரர்களின் தலையில் வெற்றிப் பூவாகவும் விளங்குகிறாய். நீ வாழ்க! மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி! போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே! கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;          காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. (புறநானூறு 272)

ஊன் தின்று உடல்வளர்ப்போர் கேலி செய்வர்

  பெரியவர்கள் செய்யும் செயல்கள் கீழ்மக்களுக்கு கேலிக்குரிய செயல்கள் போலத் தோன்றும். ஆனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு அது கேலிக்குரிய செயல் அல்ல என்பது புரியும்.  மழை பொழிய வேண்டும் என்று வேள்வி செய்து, தீ வளர்த்து அவ்வாறே மழை பொழியச் செய்பவர்கள் பெரியவர்கள்.  எங்கே சுவையான உணவு கிடைக்கும் என்று தேடி, உடலை வளர்க்க ஏதேதோ பேசி, ஊன் உணவு தின்போரை பெரியவர்களோடு எப்படி ஒப்பிட முடியும்? இசையாத போலினு மேலையோர் செய்கை வசையாகா மற்றையோர்க் கல்லாற் - பசுவேட்டுத் தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே ஊனோம்பி யூன்றின் பவர்.          (குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம்)

சண்டை போடுவது தான் சுகம்

  நிலமும் நீரும் போல  அன்பில் அவனும் நானும்...  அவனோடு கொள்ளும் பொய்க்கோபம் தரும் இன்பம் அலாதியானது. அதை விட இன்பம்  தேவருலகிலும் இருக்குமா? புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. (திருக்குறள்)   விளக்கம் : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ? (மு.வரதராசன்)

எல்லாரும் விவசாயிகள் தான்

  இனிமையான பேச்சு தான் விளைநிலம் ஆகும். பிறருக்குக் கொடுத்து உதவி செய்தல் என்பது அந்த நிலத்தில் விதைக்கப்படும் விதையாகும்! விதைத்த அந்த விதை விளை நிலத்தில் பயிராக வளர்கிற போது களைகள் வருவது இயற்கை!  எவை அந்தக் களைகள்?  வாழ்க்கையில் நாம் பேசும் கடுமையான சொற்கள் தான் களைகள்! அவ்வப்போது அதைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும்! உரிய காலத்தில்  உண்மை என்கிற எரு இட வேண்டும்!  அ ன்பு என்கிற நீரைப் பாய்ச்ச வேண்டும்! பின்பு அது அறம் என்னும் கதிராக விளையும். இதுதான் பயிர் விளைச்சல். இந்த வேளாண்மையை ஒவ்வொருவரும் இளமைக் காலத்திலிருந்தே செய்யவேண்டும்.   இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக  வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி  அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்  பைங்கூழ் சிறுகாலைச் செய்! (முனைப்பாடியார்-அறநெறிச் சாரம்)    

Change the voice

  Change the voice 1) He eats mangoes . He   --    does the action of eating. --    doer of the action --    active subject --    active voice 2) Mangoes are eaten by him . Mangoes --   object becomes subject --   this new subject is passive --   passive sentence Rules for changing active voice to passive voice --- 1) Interchange the subject and object. 2) Take suitable auxiliary verb of ‘to be or to have’ according to new subject and tense. 3) Write past participle of main verb. 4) Write the subject of given sentence after ‘by’.  5) If subject of given sentence is a pronoun, change it in passive sentence as follows- Sr.No. Active voice Passive voice 1 I (by) me 2 We (by) us 3 You (by) you 4 He (by) him 5 She (by) her 6 It (by) it 7 They (by) them 8 Ram (by) Ram 6) Place the articles, adjectives, prepositions etc. near to that noun or verb ...