Skip to main content

மின்னலுக்கு எண்ணெய் தடவி

 


நன்றாகப் பார்ப்பதற்குள் கடந்து சென்று விடும் எதையும் "மின்னல் போல" என்று சொல்லுவார்கள். 


சைக்கிள் நன்றாக வேலை செய்ய அடிக்கடி chain உள்ளிட்ட பாகங்களுக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் விட்டுப் பராமரிப்பார்கள். அதாவது அப்படி எண்ணெய் அல்லது கிரீஸ் விடும் போது அந்த சைக்கிள் முன்பை விட வேகமாகப் போகும். 


இப்போது தான் பார்த்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளே ஆளையே காணோம் என்று சிலரைச் சொல்வார்கள். அப்போது "கண்ணு மாயம் விட்ட மாதிரி காணாமல் போய்விட்டான்" என்று சொல்வதைக் கேட்டிருப்போம். 


இந்தக் கண்ணு மாயம் விட்டது போல் காணாமல் போவதை ஆங்கிலத்தில் greased lightning என்பார்கள். 

 

மின்னலே கண்ணில் பார்க்க முடியாத வேகம். அப்படியிருக்க மின்னலுக்கு எண்ணெய் தடவி விட்டது போல என்பது "என்னா வேகம்" என்ற திகைப்பைக் காட்ட வந்த மரபுத் தொடர்.


"வாம்மா மின்னல்" என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி greased lightning என்பதற்கு செய்முறை விளக்கம் போல இருப்பதைப் பார்த்திருப்போம்.


When he saw his father, he ran out the door like greased lightning.

என்பது பயன்பாட்டுக்கான ஒரு உதாரணம்.


greased lightning என்று ஒரு ஆல்பம் song கூட இருக்கிறது. 


Well, this car is automatic, it's systematic, it's hydromatic

Why it's Greased Lightning!

We'll get some overhead lifters and four barrel quads, oh yeah


இது அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்.







Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...