தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது விடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விடியும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இருள் விலகும் அறிகுறியே தெரியவில்லை. சூரியன் வந்தால் விடிந்து விடும். ஒருவேளை சூரியனுக்கு ஏதும் பிரச்சினையோ? அதனால் தான் இன்னும் வராமல் இருக்கிறதோ? சூரியனை பாம்பு விழுங்கியிருக்குமோ? சூரியனின் தேரின் அச்சு முறிந்து தேரில் கட்டியிருந்த குதிரைகள் கயிற்றை உருவிக்கொண்டு எங்காவது ஒடிவிட்டனவோ? சூரியன் செத்துப் போய்விட்டானோ? கிழக்கு என நினைத்துக் கொண்டு வேறு திசையில் போய் நின்று கொண்டிருக்கிறானோ? எப்பத் தான் விடியுமோ? எப்படி(டீ) விடியும்? அரவு விழுங்கிற்றோ அச்சுத்தான் இற்று புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ வேறுதிசை சென்றானோ என்தோழி எத்தால் விடியும் இரா.