நான் அவளைப் பார்க்கும் போது அமைதியான சின்னப் பெண் போலத் தான் தெரிகிறாள்.
ஆனால் அவள் என்னைப் பார்க்கும்போது என் உயிரை உறிஞ்சி எடுத்து விடுகிறாள்.
எப்படி இந்த முரண்பாடு?
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
(திருக்குறள்)
விளக்கம்:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback