Skip to main content

ஆமாம் சாமிகள்

 நாம் ஒரு செய்தியைச் சொல்லும் போது அந்த செய்தியின் முடிவில் "இல்லையா?" என்று சேர்த்துக் கொள்வது மற்றவர்களை கவனிக்க வைப்பதற்கு ஒரு நல்ல வழி.


அப்போது கேட்பவர் அதற்கு "ஆமாம்" சொல்ல வேண்டியிருப்பதால் நாம் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார். 


சொல்லும்போது கவனிக்க வைப்பதற்காக நம் கையை உரிமையோடு பிடித்துக் கொண்டே சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது "புரிந்து கொண்டு ஆமாம் சொன்னால் தான் கையை விடுவேன்" என்பது போல இருக்கும்.


 இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.சபையின் எந்தக் கூட்டத்திலாவது பேசப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. 


இப்படிப்பட்டவர்களிடம் பெற்ற அனுபவமோ என்னவோ சிலர் யார் எதைச் சொன்னாலும் எதற்கு ஊர் வம்பு என்று "ஆமாம்" சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 


மழை வருவது போல இருக்கிறது.


ஆமாம், அப்படித் தான் தெரியுது.


எவ்வளவு வெயில்!


ஆமாம், நல்ல வெயில்.


இதெல்லாம் சரி. யாருக்கும் தெரியாத செய்தியை முதல் முதலாகச் சொல்லும்போதும் "ஆமாம்" சொல்லி அதிர வைப்பவர்கள் இருக்கிறார்கள்.



இன்றைய தேர்வில் எனக்கு 100/100 மதிப்பெண் வரும்.

ஆமாம், 100 மார்க் வரும்.

அப்படியா மகிழ்ச்சி என்று தான் சொல்ல நினைத்திருப்பார்கள். ஆனாலும், ஆமாம் சொல்லிப் பழகிவிட்டது. என்ன செய்ய?


ஆங்கிலத்தில் "ஆமாம்" சொல்வது இன்னும் வசதியானது. 


"ஆமாம் சாமிகள்" போல "affirmative சாமிகள்" இருப்பார்கள் போல.


It is very hot day.

So, it is.

It is a lovely scene.

Yes, it is.

They have won the match.

Yes, they have 

My brother is going to London.

Yes, he is.


நாளை பள்ளி விடுமுறை என அறிவிக்கும் போது யாராவது ஆமாம் சொல்ல முடியுமா?


அதெப்படி பழக்கத்தை விடுவது. அப்போதும் சொல்வோம்.


Tomorrow will be a holiday.


So, it will.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...