Skip to main content

இதென்ன அதிசயம். எங்க ஊரைப் பாருங்க

  

வறுமை தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இருக்கலாம். அது போல வறட்சி என்றால் என்னவென்று தெரியாமல் வளரும் மரங்கள் இருக்குமா?


அப்படி இருந்தால், செல்வம் கொட்டிக்கிடக்கும் வீட்டில் பிறந்த குழந்தைகள் போல அந்த மரங்கள் வளமான பூமியில் வாழும் வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தானே. 


அப்படி ஒரு வாழ்க்கையைக் காட்டுகிறது இந்தப் பாடல்.

அந்தப் பெண் சொல்கிறாள்.


வறட்சி எப்படி இருக்கும் என்று தெரியாத மரங்கள் மிக்க மலைச்சாரல் அது.


அந்த மலையில் ஓர் அகன்ற குன்று.


அந்தக் குன்றில் ஓர் ஆண்யானை.


அதன் பக்கத்தில் அதன் அன்புக்குரிய பெண்யானை.


அங்கே புத்தம் புதிதாகப் பூத்த அழகிய காந்தள் பூக்கள். 


அப் பூக்களில் பல தரையில் சிதறிக் கிடந்தன. 


அவை எப்படிக் கிடந்தன தெரியுமா !


சும்மா இருக்க முடியாமல் யானைகள் ஒன்றோடொன்று தாக்கிக்கொண்டபோது அவற்றின் முறிந்துபோன கொம்புகள் கிடப்பது போல் காந்தள் பூக்கள் பூத்துக் கிடந்தன.

( சிதறிக் கிடக்கும் பூக்கள் போல யானைத் தந்தங்கள் என்றால் எத்தனை யானைகள் அந்தக் குன்றில் ...)


எங்கு பார்த்தாலும் நீர் ஊற்றுகள்... 


அவை ஒலியுடன் மலையிலிருந்து வீழ்ந்து அருவியாக நீரை அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தன.


அது தான் என்னவன் ஊர்.


(ஊர்ப் பெருமையை அந்தப் பெண் சொல்லும் அழகில் கொஞ்சம் கர்வம் தெரிகிறது தானே!)


எல்லா மலைகளும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்திருக்கும் போல.


இப்போது அருவி என்பது நமக்கெல்லாம் tourist attraction.


இன்னும் சில ஆண்டுகளில் அருவி என்பது அதிசயமாகப் பார்கப்படுமோ?


வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்

விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,

மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,

புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,

உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன,            

அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்

பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

(கலித்தொகை)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...