Skip to main content

யாரோடு விளையாட்டு

 என் தந்தை கடலில் போய் மீன் பிடித்து வந்தார்.


அதைக் கருவாடாக்க கரையில் காய வைத்துவிட்டு வந்தோம்.


அந்தக் கருவாடு காயும்போது தின்ன வரும் பறவைகளை விரட்டினோம்.


அப்புறம் கொஞ்ச நேரம் மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இளைப்பாறினோம்.


ஞாழல் மரக் கிளையில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடினோம்.


கீழ்க் காற்று குவித்த மணலில் குரவை ஆடினோம்.


அதன் பிறகு என் தோழிகளுடன் கடலில் குளித்து விளையாடினோம்.


மணிப்பூத் தழைகளால் ஆடை கட்டி அதை அணிந்துகொண்டோம்.


இதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை. 


ஆனால் எங்கள் ஊர்ப் பெண்கள் எங்களைப் பற்றி ஏதேதோ பேசுகின்றனர்.


அதைக் கேட்டு என் தாய் எனக்கு இரவும் பகலும் கட்டுக்காவல் போட்டிருக்கிறாள்.


அதற்கு என் தாய் சொல்லும் காரணம், கடற்கரையில் தேர் ஒன்று நான் இருக்கும் இடம் அருகில் வந்து வந்து போகிறதாம்.


ஆக, விளையாட்டில் அவனும் இருந்திருப்பானோ!


பெருநீர் அழுவத்து எந்தை தந்த

கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,

எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,

செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,

ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்  

தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,

கொண்டல் இடு மணல் குரவை முனையின்

வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,

மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்

பல் பூங் கானல் அல்கினம் வருதல்  

கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,

கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை

கடி கொண்டனளே தோழி! ''பெருந்துறை,

எல்லையும் இரவும் என்னாது, கல்லென

வலவன் ஆய்ந்த வண் பரி          

நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு'' எனவே.

(அகநானூறு)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...