Skip to main content

விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் கொடு.

 

 நிறையப் பொருள் கிடைத்தது.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றபடியே தன் மனைவியிடம் சொல்லத் தொடங்கினார் அவர்.

 

“என் அன்புக்குரியவளே!


இந்தப் பொருளையெல்லாம் உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்குக் கொடு.


உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்கு மட்டுமல்ல.

நீ அன்பு காட்டுபவர்களுக்கும் கொடு.


நம் உறவினர்களில் மூத்தோர்க்குக் கொடு.


உன்னுடைய உறவினர்களுக்கும் கொடு. 


நாம் பசியால் வருந்தியபோது நமக்கு உதவிய நல்லோர்களுக்கும் கொடு.


இவர்கள் நமக்கு உறவினர்- உறவினர் அல்லாதவர் என்று நினைக்காது கொடு.


இவர்களுக்குக் கொடுக்கலாமா வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல் நீ விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் கொடு.


நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணாமல் எல்லோருக்கும் கொடு.


நம்முடைய வறுமை நிலையைப் போக்க ஏதாவது பொருள்பெற்று வரலாம் என குமண வள்ளலைப் பார்க்கப் போனேன்.


அந்த வள்ளல் அள்ளிக்கொடுத்தது தான் இத்தனை செல்வமும்.


இப்படித் தன் மனைவியிடம் சொல்லி மகிழும் அவர்  புலவர் பெருஞ்சித்திரனார்.

அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் தான் நா(மு)ம் வாழ்கிறோம்.

 

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்

பல்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்

கடும்பின் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

(புறநானூறு)

 

நின் நயந்து- உன்னிடம் அன்பு காட்டி,

உறைநர்க்கும்- வாழ்பவர்களுக்கும்,

நீ நயந்து – நீ அன்பு காட்டி,

உறைநர்க்கும் –வாழ்பவர்களுக்கும்,

பல்மாண்- பல மாட்சிமைப்பட்ட,

கற்பின் –சொன்ன சொல்லிலிருந்து மாறுபடாத,

நின் கிளைமுதலோர்க்கும்- உன்னுடைய சுற்றத்தினர் முதலானோர்க்கும்,

கடும்பின் பசிதீர – சுற்றத்தின், பசியைத் தீர்ப்பதற்கு,

நின்நெடும் – உன்னுடைய நெடிய,

குறியெதிர்ப்பு- எதிர்பார்ப்பு

நல்கியோர்க்கும் – வழங்கியோருக்கும்,

இன்னோர்க்கும் என்னாது- இவர் இப்படிப்பட்டவர் என்றும் நினையாமல்

என்னோடும் சூழாது- என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்,

வல்லாங்கு வாழ்தும் – வன்மையாக வாழலாம்,

என்னாது நீயும்- என்றும் எண்ணாமல்,

எல்லோர்க்கும்- எல்லோருக்கும்,

கொடு-கொடு

மதி –கருது,

மனைக்கிழவோயே –மனைக்கு உரியவளே,

பழம்தூங்கு –பழங்கள் தொங்கும்

முதிரத்துக் கிழவன் –முதிரமலைக்குத் தலைவன்,

திருந்துவேல் – செம்மையான வேலையுடைய,

குமணன் நல்கிய வளனே- குமணவள்ளல் வழங்கிய செல்வம்

 

 

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...